நாகமணிபாம்பு-கல் (Snake-Stone), கட்டுவிரியன் கல், பாம்பின் முத்து, கருப்பு கல், பாம்பு-கல்[1] அல்லது நாகமணி என்பது விலங்கு எலும்பு அல்லது கல் ஆகும். இது பாம்புக் கடிக்கு நாட்டு மருந்தாக ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப்பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2] [3] ஆரம்பக்கால செல்டிக் சகாப்தமான ஐரோப்பிய ஆடர் கல், பாம்புக் கல் என்று அழைக்கப்படுகிறது. இது வண்ணக் கண்ணாடியிலிருந்து துளைகளுடன் தயாரிக்கப்படுகிறது. பாம்புக் கடியிலிருந்து காப்பதைவிடத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். பாம்பு கடித்தால் இந்தக் கல் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மிகவும் தெளிவாகக் கூறுகிறது. மேலும் பெரும்பாலான பாம்புகள் நச்சற்ற பாம்புகளே! பாரம்பரிய மருத்துவ பழக்கங்களான பாம்பு கடித்த இடத்தினை கீறுதல், அகற்றுதல், உறிஞ்சுதல் அல்லது “கருப்பு கற்களை” பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.[3] [4] விளக்கங்கள்'கருங்கல்லை' எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெருவில், ஒரு கருப்பு கல் என்பது ஒரு சிறிய எரிந்த மாட்டு எலும்பாகும். இக்கல்லினை பாம்புக் கடித்த இடத்தின் மீது வைத்து இறுக்கமாகக் கட்டிவிடுகின்றனர். சில நாட்கள் அப்படியே இதனை விட்டுவிடுகின்றனர். இந்த கால நேரத்தில் கருப்பு கல் காயத்திலிருந்து நச்சினை ஈர்க்கிறது என நம்புகின்றனர்.[5] பாரசீக/ஈரானிய எழுத்தாளர் கஸ்வினி பாம்புக் கல்லை ஒரு சிறிய நட்டு அளவு உள்ளது என்று விவரிக்கிறார்.[சான்று தேவை] விச கடிப்பகுதியினை வெதுவெதுப்பான நீரில் அல்லது புளிப்பு பாலில் மூழ்கி இருக்குமாறு வைத்து, பாம்புக் கல்லினை அதனுள் இடவேண்டும். இவ்வாறு செய்யும்போது கருப்பு கல் விசத்தை வெளியேற்றி திரவத்தில் விடுகிறது. காங்கோவில் 'கல்' என்று அழைக்கப்படும், கருப்பு கல் பெரும்பாலும் விலங்குகளின் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பாம்புகளிலிருந்து எடுக்கும்போது, இது வழக்கமாகத் தலையிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. ஆனால் பாம்பின் வாலிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. [6] ஆப்பிரிக்கத் துண்டுப்பிரசுரத்தில் கீழ்க்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது[7] :
பாம்பு கற்கள் குறித்த அறிவியல் ஆய்வுகள்நைஜீரிய ஆய்வு "சந்தேகத்திற்கிடமான முதலுதவி நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம்” குறித்த விழிப்புணர்வினை பரப்புகின்றது.[8] ஆனால் இதே மருத்துவர்கள் கறுப்புக் கற்கள் நன்மை பயக்கக் கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் "கருங்கல்லைப் பயன்படுத்துபவர்களுக்கு டூர்னிக்கெட்டைப் பயன்படுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக அளவு எதிர் நச்சு தேவைப்படுகிறது". [1] தங்கள் அறிக்கையில், டூர்னிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்குச் சற்றே அதிக திசு அழிதல் நிகழ்வதாகக் குறிப்பிட்டனர். ஆனால் இது புள்ளிவிவர அடிப்படையில் குறிப்பிடத்தக்கதாக இல்லை. பிற விஞ்ஞானிகள் டூர்னிக்கெட்டுகளுக்கு எதிராகப் பரிந்துரைத்துள்ளனர் (பாம்புக் கடி சிகிச்சை மற்றும் காலாவதியான சிகிச்சையைப் பார்க்கவும்). பொலிவிய மருத்துவம் ஆய்வு "வேகமாகப் பரவிவரும் கருப்புக் கல் நோயினைக் குணப்படுத்தும் என்பதில் எதிர்பார்க்கப்பட்ட பலன் இதுவும் இல்லை என்பதாகும்".[9] இந்திய ஆய்வு, "கருங்கல் கல் குணப்படுத்துதல் போன்ற விஞ்ஞானமற்ற செயல்களை மக்கள் நம்புவதால், முறையான பொருத்தமான மருத்துவ உதவியை நாடுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கின்றன."[3] என்பதாகும் பிரபலமான ஊடகங்களில்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia