நாகம்பட்டி ஊராட்சி, திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் ,நாகம்பட்டி பஞ்சாயத்து ,வேடசந்தூர் பேரூர்க்கு மேற்க்குப் பகுதியில் அமைந்துள்ளது. பஞ்சாயத்தின் அலுவலகம் ஒட்டன்சத்திரம் ரோட்டில், சேணன் கோட்டையில் அமைந்துள்ளது.. இதன் மேற்கு எல்லையாக ஒட்டநாகம்பட்டி - புதூர் ,ம் - தென்கிழக்கு எல்லையாக நாகம்பட்டி,யும், வடகிழக்கு எல்லையாக கருக்காம்பட்டி - எல்லை காளியம்மன் கோவிலும், வடமேற்கு எல்லையாக குறியாண்டி குலமும், தென்மேற்கே சித்தமரம் நால்ரோடு பகுதியும் அமைந்துள்ளது. இதில் 13 கிராமங்கள் அமைந்துள்ளது. பிராதான தொழில் விவசாயம். நூற்பாலைகளும் & சோப்பு அலைகளும் அமைந்துள்ளது. 5 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், 1 நடுநிலைப் பள்ளியும் உள்ளது. அய்யனர் கோவில், ஒட்டநாகம்பட்டி முனியப்பன் கோவில், கருக்காம்பட்டிஎல்லை காளியம்மன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் புகழ்பெற்றவை. பஞ்சாயத்தின் வருவய் கிராமம் வேடசந்துர் கிராமம் (கஸ்பா) ஆகும். ஒட்டநாகம்பட்டி - புதூர், ஒட்ட நாகம்பட்டி, சீத்தமரம், சேணன் கோட்டை, பெருமாள் கவுண்டன்பட்டி, குன்னம்பட்டி, லவு கணம்பட்டி, அரிச்சாகவுண்டனூர், நாகம்பட்டி, அய்யனார்நகர், தம்மனம்பட்டி, கருக்காம்பட்டி, கொண்ணாம்பட்டி, மகாத்மாநகர் ( மாட்டு ஆஸ்பத்திரி). குறியாண்டி குலம் போன்ற சிறுகிராமங்களை உள்ளடக்கிறது. Pin Code. 624710.[1]
|
Portal di Ensiklopedia Dunia