நாராயண ஐயங்கார்அப்பனையங்கார் திரு நாராயண ஐயங்கார் இதழாசிரியர்; ஆய்வாளர்; நூலாசிரியர்.
பிறப்புதமிழ் இலக்கிய உலகில் திரு நாராயண ஐயங்கார் என்று அறியப்பட்ட அ. நாராயண ஐயங்கார் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள எதிர்க்கோட்டை என்னும் சிற்றூரில் 1861 அக்டோபர் 31 ஆம் நாளில் கோ. அப்பனையங்கார் – செங்கமலவல்லி என்னும் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ், வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்.[1] கல்விநாராயணனார் உள்ளூரில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் இராமநாதபுரம் சென்று அங்கு வாழ்ந்த பந்தல்குடி வேங்கடாசாரியாரிடம் வடமொழியையும் சித்தாத்திக்காடு சிறீநிவாசாசாரியாரிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட வைணவ நூல்களையும் சாமாசாரியாரிடம் ஏரணமுறை (தருக்கம்)யையும் பழனிக்குமார தம்பிரானிடம் சைவநூல்களையும் கற்றார்[2]. மேலும் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து பல நூல்களைக் கற்றறிந்தார். பணிகல்வி கற்றல் நிறைவடைந்ததும் தன்னோடு பயின்ற பாண்டித்துரைத் தேவர் அரசவையில் அவைக்களப் புலவராகப் பணியாற்றினார். 24.5.1901 ல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டபோதிருந்து தமிழ்ச்சங்கக் கலாசாலைத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று[3], தன் இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ நாற்பத்தாறு ஆண்டுகள்) அப்பதவியைத் திறம்பட நிர்வகித்தார். இதழாசிரியர்நாராயண ஐயங்கார் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்படும் செந்தமிழ் இதழின் ஆசிரியராக[4] 1911 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருக்கு முன்னர் அவ்விதழுக்கு 1902 முதல் 1907 வரை இரா. இராகவையங்காரும் 1907 முதல் 1911 வரை மு. இராகவையங்காரும் ஆசிரியர்களாக இருந்தனர். படைப்புகள்இவர் பின்வரும் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்:[1]
இவை தவிர இலக்கணம். இலக்கியம். ஏரணம் (தருக்கம்), சோதிடம், வரலாறு, சமயம் தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்[2]. விருதுகள்நாராயண ஐயங்கார் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் பல. சில இங்கே வருமாறு:
மறைவுநாராயண ஐயங்கார் 1947 சூலை 29 ஆம் நாள் மறைந்தார். சான்றடைவு
|
Portal di Ensiklopedia Dunia