நாவிதர் (பொதுவாக அம்பட்டன் என்று அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுபவர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.[2][3] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,[4] ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
சொற்பிறப்பு
அம்பட்டன் என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான அம்பாஸ்தா என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.[5] இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது "அருகில் நின்று முடிதிருத்தும் ஒருவரை" குறிக்கிறது.[6]
நாவிதர் என்ற சொல் நாவிகர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு புனித மனிதன் என்று பொருளாகும். இவர்கள் மருத்துவர், பரியாரி, வைத்தியர் என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.[7][8]
↑தேமொழி, ed. (மார்ச் 2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். அறிவொளி பதிப்பு. p. 158. தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்{{cite book}}: no-break space character in |quote= at position 9 (help)CS1 maint: year (link)
↑Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. p. 764. ISBN9788185692319.
↑Bhanu, B. V. (2004). Maharashtra (in ஆங்கிலம்). Anthropological Survey of India: Popular Prakashan. p. 1169. ISBN9788179911013.