நா. தர்மராஜன்
நா. தர்மராஜன் (பிறப்பு: ஆகத்து 4, 1935) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 120 நூல்களையும் 50 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[1] வாழ்க்கைச் சுருக்கம்தமிழ்நாடு, சிவகங்கையில் வசதியான வேளாண்மைக் குடும்பத்தில் ஆசிரியர் நாராயண சேர்வைக்குப் பிறந்தவர் தர்மராஜன்.[2] துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1954-இல் மாணவராக இருந்த நாட்களிலேயே தோழர் ஜீவாவின் பேச்சுக்களால் கவரப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார்.[3] மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகத்தில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். லியோ தல்ஸ்தோயின் அன்னா கரேனினா, மற்றும் பாரிஸ் கம்யூன், மகாத்மா - சில பார்வைகள் போன்ற பல நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார்.[4] 1978ல் அவர் ஸ்டீன்பெக்கின் நிலவு வந்து பாடுமோ என்ற புதினத்தை மொழிபெயர்த்தார். இ. எம். பாஸ்டரின் பாஸேஜ் டு இண்டியா என்ற நூலை இந்தியா மர்மமும் சவாலும் என்று மொழிபெயர்த்து வெளியிட்டார்.[3] உருசிய தலைநகர் மாஸ்கோவில் இருந்த முன்னேற்றப் பதிப்பகத்தில் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து பணிபுரிந்தார்.[5] நா.தர்மராஜனின் நேர்காணல்கள், அவருடைய நூல்களைப் பற்றி பல்வேறு இதழ்களில் வெளிவந்த திறனாய்வுகள், மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று "மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் - 80" என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[6] இவரின் மொழிபெயர்புகள் சில
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia