நிர்மல் பாரத் அபியான்
நிர்மல் பாரத் அபியான் (இந்தி: निर्मल भारत अभियान) முழுமைத் துப்புரவு இந்தியா இயக்கம் என்பது 1999 முதல் 2012 வரை இந்திய அரசு மேற்கொண்ட முழுமைத் துப்புரவு பரப்புரை இயக்கம் ( Total Sanitation Campaign) or TSC) ஆகும். இது சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு (community-led total sanitation) (CLTS) நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் திட்டம் ஆகும். இந்த இயக்கத்தை இந்திய அரசு 1999 இல் தொடங்கி வைத்த்து. இது மக்கள் முயற்சி தேவை முடுக்கிய துப்புரவு இயக்கம் ஆகும்.[சான்று தேவை] இது குறைந்த அளவில் மட்டுமே மக்கள் பங்கேற்பு செய்து, ஓரளவு வெற்றிகண்ட நடுவண் ஊரகத் துப்புரவு திட்டத்தில் இருந்து உருவாகியது. இது முழுமைத் துப்புரவு நெறிமுறைகளைப் பின்பற்ரவில்லை.[சான்று தேவை] முழுமைத் துப்புரவு இயக்கத்தின் முதன்மை இலக்க 2017 அளவில் பொதுவிடக் கழிப்பு நடைமுறையை ஒழித்துகட்டுவது ஆகும்.சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு திட்டத்தில் கழிப்பறை கட்டும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவிடக் கழிப்பு நீக்கும் பண்பாட்டு வரன்முறைகள் மட்டும் திட்டமிடப்பட்டன.[சான்று தேவை] இந்த த் திட்டம் மகாராட்டிரத்தில் தொடங்கப்பட்டபோது 200 ஊராட்சி மன்றங்கள் பொதுவிடக் கழிப்பை நீக்கி இதை நடைமுறைப்படுத்தின.[சான்று தேவை] இதை நடைமுறைப்படுத்திய ஊராட்சிகளுக்கு விருதும் பணப் பரிசுகளும் நிர்மல் கிராம் புரசுகார் திட்ட்த்தின் கீழ் நாளிதழ்களில் வழியாக பொதுமக்களிடம் பரவலான விளம்பரமும் தரப்பட்டன.[1][2][3] நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் பரப்பல் தூதுவராக வித்யா பாலன் பொறுப்பேற்றார். இத்திட்டமே 2014 அக்தோபர் 2 இல் காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா இயக்கமாக (சுவாச் பாரத் அபியான்) மீளத் தொடங்கப்பட்டது. பின்னணிஇந்திய அரசு நடுவண் ஊரகத் துப்புரவு திட்டத்தை 1986 இல் தொடங்கியது. இதன் முதன்மையான நோக்கம் ஊரக மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தலும் மகளிருக்கு கழிப்பிடத் தனிமையையும் உரிய மதிப்பையும் உருவாக்குதலும் ஆகும்.[சான்று தேவை] துப்புரவு சார்ந்த கண்ணோட்டத்தில் தனியரின் துப்புரவும் வீட்டின் துப்புரவும் நல்ல குடிநீரும் குப்பை அகற்றுதலும் மலமும் கழிவுநீரும் அகற்றுதலும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. துப்புரவு சார்ந்த இந்த அகல்விரிவான நோக்குடன், இந்திய அரசு உருவாக்கிய சமூகத் த்லைமைதாங்கும் முழுமைத் துப்புரவு திட்டம் தேவை சார்ந்து விரைவுபடுத்தும் அணுகுமுறையை மேற்கொண்டது. இதற்கு முழுமைத் துப்புரவு பரப்புரை எனப் பெயரிட்டு 1999 முதல் நடைமுறைக்குக் கொணர்ந்தது. இப்புது அணுகுமுறை, தகவல், கல்வி, தொடர்பாடல், மனிதவள மேம்பாடு, திறமை உருவாக்க நடவடிக்கைகள் ஆகியவற்ரில் கவனம் செலுத்தி, ஊரக மக்களிடம் விழிப்புணர்வையும் துப்புரவு ஏந்துகளின் தேவையையும் வற்புறுத்தியது.இந்தப் பரப்புரை, பொருளியல் நிலையைப் பொறுத்து நிலவும் பல்வேறு மாற்று வழிமுறைகளில் உகந்த ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கும் திறமையை உருவாகியது. இத்திட்டம் சமூகத் த்லைமையின்கீழ் மக்களே முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வறுமைக்கோட்டின் கீழுள்ளவருக்கு அவர்களது முயற்சியைப் பாராட்டி, தம் வீடுகளில் தனிக் கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள நிதியுதவி தரப்பட்டது. மேலும் பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் பொது ஊரகப் பகுதிகளிலும் கழிப்பறைகளைக் கட்டவும் நிதி நல்கப்பட்டது. இதோட திண்ம, நீர்மக் கழிவு மேலாண்மை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.[சான்று தேவை] இத்திட்டத்துக்கு ஊக்கம் அளிக்க, இந்திய அரசு முழுமைத் துப்புரவை ஏற்படுத்தியவர்க்கு நிர்மல் கிராம் புரசுகார் திட்டம் தொடங்கி, அதன் வழியாக ஏற்பையும் விருதுகளையும் வழங்கியது. இவ்விருதுகள் மக்களுக்குப் பேரூக்கத்தை அளித்து இந்திய ஊரகப் பகுதிகளில் முழுமைத் துப்புரவை அடைய வழிவகுத்தன.[சான்று தேவை] நிர்மல் கிராம் புரசுகார் விருதும் ஏற்பும் தந்த வெற்றியால் முழுமைத் துப்புரவு பரப்புரை இயக்கம் “தூய்மை இந்தியா இயக்கம் (Nirmal Bharat Abhiyan)” (NBA) என 2012 இல் பெயர் மாற்றப்பட்டது. இதன் நோக்கம், புதிய செயல்நெறிமுறைகளாலும் முழுநிறைவு அணுகுமுறையாலும் ஊரகப் பகுதிகளில் வாழும் ஊரகச் சமூகம் துப்புரவில் முழுத் தன்னிறைவை நோக்கி விரைவாகச் செல்ல வழிவகுப்பதேயாகும்.[சான்று தேவை] நோக்கங்கள்
நடவடிக்கைகள்இந்த இயக்கத்தின்கீழ் பின்வரும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படுகின்றன:[4]
சிக்கல்கள்இயக்கங்களுக்கான ஆய்வின் போதாமைமத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு ஊராட்சிகளில் இந்த இயக்கத்தின் செயல்திறமையை மதிப்பிடவும் திறந்தவெளிக் கழிப்புக் குறைந்தமையால் சிறுவரின் உடல்நல மேம்பாட்டை அறியவும் ஓராய்வு தான்தோன்றிபோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கழிப்பரைகல் கூடியமை தெரியவந்தாலும் திறந்தவெளிக் கழிப்பு குறைந்த்தாகவோ சிறுவர் உடல்நலம் மேம்பட்டதாகவோ உறுதிபடுத்த முடியவில்லை. என்றாலும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு சிற்றளவு பதக்கூறுகளையே எடுத்துக்கொண்டதையும் ஆய்வில் இயக்க குறுக்கீடுகளையும் தரவுகள் மக்கள் சொந்தமாக்க் கூறிய தகவல்களைச் சார்ந்ததையும் ஒப்புக்கொண்டாலும் இந்த ஆய்வு முழுமை ஊரகத் துப்புரவு மேம்பாட்டில் நிலவும் அறைகூவல்களைச் சுட்டுவதாகக் கூறுகின்றனர்."[5] என்றாலும் இந்த திட்ட விருதுகளால் மக்கள் ஊக்குவிக்கப்பட்டு இந்நிலைமை பெரிதும் மாற வாய்ப்புள்ளதை ஒப்புக்கொள்கின்றனர்.[6] நிதி உதவிஇந்திய அரசு நவீன கழிப்பிடம் கட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம், மாநில அரசுகள் மூலம் மானியமாக வழங்குகிறது.[7].[8] விழிப்புணர்வு இயக்கம்கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாவட்ட நிர்வாகங்கள், ”நிர்மல் அபியான்” எனும் பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியாவில் நூறு விழுக்காடு கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது. சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர், 19அம் நாள் உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.[9] [10] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia