நிர்மல் பொம்மைகள்![]() நிர்மல் பொம்மைகள் (Nirmal toys) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் என்ற ஊரில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இந்திய மர பொம்மைகளாகும். [1] நிர்மல், புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை எண் 44இல் ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ![]() வரலாறு![]() வெப்பாலை மரத்தினைக் கொண்டு பொம்மைகள் செய்து அதற்கு அரக்குப்பூச்சு பூசுவது இப்பொம்மைகளின் தனிப்பட்ட சிறப்பாகும்.[2] இம்மரம் பேச்சுவழக்கில் ஆலே மரா (தந்தம்-மரம்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மர பொம்மைகள் மற்றும் ஓவியங்களை உருவாக்கும் 400 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை உள்ளடக்கிய இந்த பாரம்பரிய மிக்க கைவினைக் கலையானது உலகில் பெருமை கொள்ளும் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு நேர்த்தியாக தயாரிக்கப்படும் அழகிய ஓவியங்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில் அறைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தெலங்காணாவில் உள்ள நிர்மல் மாவட்டம் ஒரு காலத்தில் பீரங்கிகள் மற்றும் பொம்மைகள் போன்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தி மையமாக இருந்தது. ஐதராபாத் நிசாமின் இராணுவத்திற்கு கனரக பீரங்கிகளை வழங்கிய அதே வேளையில், கைவினைஞர்களும் கலைஞர்களும் நிர்மல் கலை என்ற பெயரில் நேர்த்தியான மர பொம்மைகளையும் ஓவியங்களையும் கொண்டு வந்தனர். நிசாம் ஆட்சி மறைந்த உடனேயே இதுவும் மூடப்பட்டது. தற்போது வெறும் 4 இடங்களில் மட்டுமே நகாசு கைவினைஞர்களால் நேர்த்தியான பொம்மைகள் மற்றும் ஓவியங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தோற்றம் தொடர்பான பதிவுகள் எதுவும் இப்போது இல்லை என்றாலும், நகாசு குடும்பங்கள் 17 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானிலிருந்து நீமா நாயக் (அல்லது வேறொரு பதிப்பின் படி நிம்மா நாயுடு) என்பவரால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. பல மாற்றங்கள் அவற்றின் கலை வடிவத்தில் வெளிப்படையாக அந்தக் காலத்தின் புரவலர்களின் சுவைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளன. ![]() விளக்கம்ஆரம்பத்தில், கைவினைஞர்கள், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான மென்மையான மரங்களிலிருந்து பொம்மைகளை தயாரித்தனர். நிசாமின் ஆட்சியில் அவர்கள் மர தளவாடங்களையும் உருவாக்கினர். இப்போது உள்ளூரில் கிடைக்கும் மென்மையான மரத்திலிருந்து செதுக்கப்பட்டு டுகோ வண்ணப்பூச்சுகளால் வரையப்பட்டு வருகின்றன. இந்தப் பொருட்கள் திருமணங்களில் பரிசுகளாகப் பயன்படுத்தப்பட்டன. கஞ்சிஃபா விளையாட்டு அட்டைகளும் பாரம்பரியமாக நிர்மலில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பிப்ரவரி 2011 நிலவரப்படி, ஒரு வயதான கைவினைஞர் மட்டுமே அவற்றை உருவாக்கி வருகிறார். கலைஞர்கள் இயற்கை சாயங்களிலிருந்து டுகோ வண்ணப்பூச்சுகளுக்கு மாறினர். டுகோ வண்ணங்களைப் பயன்படுத்துவதால், நிர்மல் ஓவியங்கள் ஒரு பொதுவான பிரகாசத்தைப் பெறுகின்றன. பொம்மைகளும் பற்சிப்பி வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டிருக்கின்றன.[3] ![]() ![]() ![]() மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia