நிலாந்தன்

நிலாந்தனின் நூல் ஒன்று

நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளியாக நிலாந்தன் அறியப்படுகிறார்.[1] கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்.

மேற்கோள்கள்

  1. "மன்னிப்பதற்கான உரிமை - நிலாந்தன் - TamilnaathaM", www.tamilnaatham.org, retrieved 2023-11-27

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya