நீத்தார்தொல்காப்பியர்காமம் சான்ற கடைக்கோட் காலை விளக்கம்இறந்து வாழ்பவர்காம வாழ்க்கை நிறைவுற்ற வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் பாதுகாவலாக இருக்கும் மக்களோடு பின்னிப் பிணைந்து சுற்றத்தாரும் சேர்ந்திருக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அகவை முதிர்ந்த மனைக் கிழவனும் மனைக் கிழத்தியும் இப்படித்தான் வாழவேண்டும் என்று அனைவருக்கும் பயிற்றுவிக்கும் பாங்கோடு உலகியலோடு ஒன்றாமல் விலகியிருந்து வாழ்வதுதான் 'இறந்ததன் பயன்' என்கிறார் தொல்காப்பியர். திருவள்ளுவர்இறைநிலைதிருவள்ளுவர் முதல் நான்கு அதிகாரங்களில் இறைநிலையைக் காட்டுகிறார். இறை - முதல் அதிகாரம்நமக்குள் பகவாகவும், நமக்கு வெளியில் ஆதியாகவும் இறைவன் இருக்கிறான். அவன் நமக்குள் அறிவு, மலரும் மனம், ஆசை முதலானவையாக இருக்கிறான். பிறர் அறிவு, பிறர் மனம், பிறர் ஆசை முதலானவையாக ஒருவனுக்கு வெளியிலும் இருக்கிறான். நம் அனைவரின் அறிவு, மனம், ஆசை முதலானவற்றை யெல்லாம் கடந்தவனாகவும் இருக்கிறான். வான் - இரண்டாம் அதிகாரம்உலகில் உயினம் வாழ உதவும் மழையாக இருக்கிறான். நீத்தார்
அறம்மக்களின் கூட்டு வாழ்க்கைக்கு உதவும் அறநெறியாக இருக்கிறான். கணியன் பூங்குன்றனார்'உரம் சாச் செய்யார் உயர்தவம்' (நற்றிணை 226) ஒருவன் தன் உடலிலும் உள்ளத்திலும் உள்ள தெம்பாகிய உரத்தைச் சாகடிக்காமல் செய்யும் தவமே உயர்தவம் என்கிறார் கணியன் பூங்குன்றனார். |
Portal di Ensiklopedia Dunia