நீர்க்காரம்நீர்க்காரம் என்பவை கார உலோகங்கள் (உதாரணம்: இலித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபீடியம், சீசியம் போன்றவை) ஐதராக்சைடுகளுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும் சொல்லாகும். ஆல்கலிகள் சிவப்பு லிட்மசை நீல நிறமாக மாற்ற வல்ல வலிமையான காரங்களாகும். இவை அமிலங்களுடன் வினைபுரிந்து நடுநிலையான உப்புக்களைத் தருகின்றன. இவை எரிதன்மையுடையவையாகவும் மற்றும் உயிருள்ள திசுக்களை அரிக்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன. நீர்க்காரம் என்ற சொல்லானது கார மண் உலோகங்களின் (பேரியம், கால்சியம், இசுட்ரான்சியம் போன்றவை) கரையக்கூடிய ஐதராக்சைடுகளையும், மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடையும் கூடக் குறிக்கப் பயன்படுகிறது. உண்மையில் நீர்க்காரம் என்ற சொல்லானது சோடியம் அல்லது பொட்டாசியத்தைத் தரக்கூடிய தாவரங்கள் எரிக்கப்பட்டுக் கிடைக்கும் சாம்பலைக் குறிக்கக்கூடியதாகும். நீர்க்காரங்களின் பொதுவான பண்புகள்நீர்க்காரங்கள் அனைத்துமே அறீனியசு காரங்களாகும். இவை நீரில் கரைக்கும் போது ஐதராக்சைடு அயனிகளைத் (OH−) தரவல்லவை. பொதுவான காரத்தன்மையுள்ள ஆல்கலி நீர்க்கரைசல்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:
நீர்க்காரங்கள் மற்றும் காரங்கள் இவற்றுக்கிடையேயான வேறுபாடு"காரம்" மற்றும் "நீர்க்காரம்" என்ற சொற்கள் வேதியியல் மற்றும் வேதிப் பொறியியல் தவிர பொதுவெளியில் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்க்காரம் என்ற கருத்துக்கான மேலும் குறிப்பிடப்பட்ட பல்வேறு வரையறைகள் உள்ளன. வழக்கமாக, காரங்கள் என்ற வகைப்பாட்டின் உட்பிரிவாக நீர்க்காரங்கள் வரையறுக்கப்படுகின்றன.
காரங்களின் இரண்டாவது உட்பிரிவானது அறீனியசு காரம் எனவும் அழைக்கப்படுகிறது. நீர்க்கார உப்புகள்நீர்க்கார உப்புகள் நீர்க்கார உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடுகள் ஆகும். இவற்றில் சில உதாரணங்கள்:
காரத்தன்மையுள்ள மண்7.3 ஐக் காட்டிலும் அதிகமான pH மதிப்பைக் கொண்ட மண்ணானது காரத்தன்மையுள்ள மண் என வரையறுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணானது கார வகை உப்புக்களின் இருப்பினால் தோன்றுகிறது. பல தாவரங்கள் (முட்டைக்கோசு மற்றும் எருமைப்புல் போன்றவை) இலேசான காரத்தன்மை உடைய மண்ணில் நன்கு வளரும் தன்மையைக் கொண்டிருப்பினும், மிதமான அமிலத்தன்மையைக் கொண்ட (pH மதிப்பு 6.0 முதல் 6.8 வரை) மண்ணில் வளரும் தன்மை பெற்ற தாவரங்களுக்கு கார வகை மண் உகந்ததாக இருப்பதில்லை. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia