நீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். பொதுவாக இது புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.
நீர்த்தேக்க வகைகள்
தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.
♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்
♦ கரையோர நீர்த்தேக்கம்
♦ சேவை நீர்த்தேக்கம்
பட்டியல்
தமிழ்
ஆங்கிலம்
வேறு
விளக்கம்
1
அருவி
water fall
Stream
நீர்வீழ்ச்சி
மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர்
ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.[6]
↑தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவகை