நுண்கலைகள் கழகம், கொல்கத்தா
நுண்கலைகள் கழகம், கொல்கத்தா (Academy of Fine Arts) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள மிகப்பழமையான நுண்கலைக் கழகங்களில் ஒன்றாகும்.[2] ![]() வரலாறுஇக்கழகம் 1933[2][3] ஆம் ஆண்டு திருமதி ராணுமுகர்சியால்[4] நிறுவப்பட்டது. முதலில் இந்திய அருங்காட்சியகம் வழங்கிய ஒரு அறையில் செயற்படத் தொடங்கிய இக்கழகம் தன்னுடைய ஆண்டுக் கண்காட்சிகளை அருகில் அமைந்திருந்த நீண்ட தாழ்வாரத்தில் நடத்தியது. இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றிய பிதான் சந்திர ராய், திருமதி ராணுமுகர்சியின் முயற்சிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். அப்போது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த சவகர்லால் நேரு அவர்களும் முகர்சியின் முயற்சிகளைப் பாராட்டினார். செயிண்ட் பால் மறைமாவட்டப் பேராலயம் அருகிலுள்ள கதீட்ரல் சாலையில் உள்ள சற்றுப்பெரிய, தற்போது இருக்கும் இடத்திற்கு நுண்கலைகள் கழகம் இடம் பெயர்ந்தது. ருச்சி மோடி மற்றும் கலைஞர் சுவப்னேசு சவுத்ரி போன்ற பிரமுகர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஓவியர் நாபாகிசோர் சந்தா நுண்கலை கழகத்தின் நிர்வாக உறுப்பினராக பதவிவகித்தார். ககனேந்திரநாத் தாகூரின் சாத்பாய் சம்பா, யாமினிராயின் சிவனுடன் கணேசன் போன்ற சில பிரபலமான ஓவியங்கள் இங்கு இருக்கின்றன.[3] நாடக அரங்கம்கொல்கத்தா நகரத்தின் நடனமாடுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடும் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக நுண்கலைகள் கழகம் அமைந்திருக்கும் நாடக அரங்கம் திகழ்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல், வருடாந்தர அரங்க விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. [3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia