நூலகத் திட்டம்
![]() நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும், எழுத்தாவணங்களையும், மின்வடிவில் இணையத்தில் பேணி காப்பதற்கான, இலாப நோக்கற்ற, ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும். நோக்கங்கள்
முக்கிய நோக்கங்களாகும் திட்டச் செயற்பாடுகள்நூலகம் குழுஇத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் அங்கத்துவர்கள் யாவரும் மடலாடற் குழு ஒன்றில் இணைந்துள்ளனர். முக்கிய முடிவெடுப்புக்கள், விவாதங்கள் அக்குழுவிலே நிகழ்த்தப்படுகின்றன. பொறுப்புக்கள் ஆர்வத்துக்கு ஏற்பவே பகிர்ந்தளிக்கபட்டுள்ளன. இணையப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட சில உறுப்பினர்களிடமே உள்ளன. நூற் தெரிவுஈழத்து எழுத்தாளர்களின் நூல்களில் கிடைத்தற்கரியனவற்றுக்கும் குறிப்பிடத் தக்கனவற்றுக்கும் முன்னுரிமை அளித்தே மின்னூலாக்குவதற்கான புத்தகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆயினும் இத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் தாம் விரும்பும் எந்த நூலையும் மின்னூலாக்கலாம். நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது. மேலும் சமகால எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கு குறித்த நூலாசிரியரின் அனுமதி பெறப்பட வேண்டும். பதிப்புரிமைஇத்திட்டம் ஈழத்து நூல்களை இலவசமாக இணையத்தில் வழங்குவதால் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் எழ வாய்ப்புகள் உண்டு என கருதப்படுகிறது. இதனை எதிர்கொள்ளுமுகமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திட்ட வரலாறுமுதல் முயற்சிகள்இந்த நூலகம் ஆரம்பத்தில் ஈழநூல் என்பதாகத் தான் இருந்தது. மதுரைத் திட்டத்தால் கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ஈழநூலாக திருக்கோணமலையின் வரலாறு 28. சூலை 2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. [1] 2004 டிசம்பரில் noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது நூலகம் திட்டம்2005 தையில் நூலகம் திட்டம் தி. கோபிநாத், மு. மயூரன் ஆகியோரால் வலையேற்றப்பட்டது. 2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது. 2006 தைப்பொங்கலன்று நூலகம் திட்டம் நூறு மின்னூல்களுடன் இணையத்திற் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இவற்றையும் பார்க்கவும்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia