நெடும்பார தாயனார்

நெடும்பார தாயனார் ஒரு பார்ப்பன முனிவர். இவர் நெடும்பாரம் (பாரம்) என்னும் ஊரினர். சேர அரசன் மூன்றாம் பதிற்றுப்பத்துத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலை வழிநடத்திச் சென்று இருவருமாகத் தவம் மேற்கொண்டனர்.[1]

பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[2]

பனம்பாரம் (பாரம்) என்னும் ஊரினர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர்.

அடிக்குறிப்பு

  1. பதிற்றுப்பத்து – மூன்றாம்பத்து பதிகம்.
  2. அகநானூறு 152
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya