நோய்த்தொற்று
நோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும்.[1][2] இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும். நோய்த்தொற்றானது பொதுவாக தீநுண்மம், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய பூஞ்சை போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், பிறபொருளெதிரியாக்கி - பிறபொருளெதிரி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும். நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக அழற்சியும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia