நோர்வேத் தமிழ் நபர்கள் பட்டியல்
கல்வியாளர்கள்
நோர்வேயில் இயங்கிவரும் KIM (Kontaktutvalget mellom Innvandrerbefolkningen og Myndighetene) என்னும் ஒரு சுயாதீனமாக அமைப்பு வருடந்தோறும் நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை தெரிவு செய்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட, நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[1][2]
அறிவியல்/மருத்துவம்
ஊடகவியலாளர்கள்
வணிகம்
அரசியலாளர்கள்
விளையாட்டு வீரர்கள்
இலக்கியவாதிகள்எழுத்தாளர்கள்
கவிஞர்கள்
தமிழ் கலைஞர்கள்தமிழ் இசையமைப்பாளர்கள்
தமிழ் ஓவியர்கள்
தமிழ் நடனக் கலைஞர்கள்
பரதசூடாமணி திருமதி தமயந்தி சாந்தகுமாரன், பேர்கன் நகரில் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் பிருந்தாவன சாரங்கா கலைப்பாடசாலையின் இரு நிர்வாகிகளுள் ஒருவராவார். இவர் நடனக்கலையை கற்பித்து வருகின்றார். ஏழு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக்கூடமானது, தற்போது கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களுடன் இயங்கி வருகின்றது.
தமிழ் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள்
தமிழ் வாத்தியக் கலைஞர்கள்
மிருதங்கமாமணி திரு சக்திதரன் சிவப்பிரகாசம், ஆர்யாலயா என்னும் ஒரு கலைக்கூடத்தை, 1993ஆம் ஆண்டு ஸ்தவாங்கர் நகரில் ஆரம்பித்தார். 12 மாணவர்களுடன் ஆரம்பமாகிய இக்கலைக்கூடத்தில் கஞ்சிரா, தபேலா, மிருதங்கம், மோர்சிங், கடம் முதலான பல வாத்தியங்களும் கற்பிக்கப்பட்டது. இவர் 2000ஆம் ஆண்டு பேர்கன் நகருக்கு இடம் மாறியதனைத் தொடர்ந்து ஆர்யாலயா கலைக்கூடமும் பேர்கன் நகரில் இயங்கி வருகின்றது. ஆர்யாலயா கலைக்கூடத்தின் சார்பில், 2006ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சமாதானம் மலரவேண்டி இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. பேர்கன் மாநகரில் நடைபெற்ற இவ்விசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற கோற (Kore) (சித்தார் ரகத்தைச் சேர்ந்த இசைக்கருவி) வாத்தியக் கலைஞரான ஆபிரிக்க நாட்டவராகிய சஞ்சாலி என்பவரும் இணைந்து இருந்தார்.
வீணை இசைக்கலைமாமணி திருமதி நளாயினி சக்திமித்திரன், பேர்கன் நகரில் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் பிருந்தாவன சாரங்கா கலைப்பாடசாலையின் இரு நிர்வாகிகளுள் ஒருவராவார். இவர் வீணை, சங்கீதம் முதலான கலைகளைக் கற்பிக்கின்றார். ஏழு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக்கூடமானது, தற்போது கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களுடன் இயங்கி வருகின்றது.
உசாத்துணை
நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் நூல் இன்றுவரை (27.02.2014) வெளியிடப்படவில்லை. எனவே உசாத்துணை என்று குறிப்பிடமுடியாது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia