பச்சைக்கிளி முத்துச்சரம்
'பச்சைக்கிளி முத்துச்சரம்' 2007 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும்.இப்படத்தின் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.முக்கிய கதாபாத்திரங்களாக சரத்குமார்,ஜோதிகா,மிலிந்த் சோமன்,ஆந்திரே நடித்துள்ளார்கள்.இத்திரைபடத்தின் இசைவட்டு வெளியீடு சனவரி 20, 2007 இலும்,திரைப்படம் பெப்ரவரி 2007 இலும் வெளிவந்தது. ஜேம்ஸ் சீகல் (James Siegel) என்பவரின் டிரேயில் (Derailed ) எனும் நாவலினை மையமாக வைத்து தமிழ் சூழலுக்கு பொருந்தும்வகையில் திரைப்படமாக்கப்படுள்ளது. கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் விற்பனைப்பிரதிநிதி.இவருக்கு மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. மகிழ்ச்சியான இவர்களின் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை.இதனிடையில் சரத் வழக்கமாய் பயணிக்கும் ரயிலில் ஜோதிகாவும் பயணிக்கின்றார்.இவர்களிவருக்குமிடயே காதல் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரத்குமார் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதே கதையாகும், நடிகர்கள்
தகவல்கள்
இசைஹரிஷ் ஜெயராஜ் இந்தப் திரைப்படத்தில் 5 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பலவீனங்கள் நிறைந்த ஒரு கேரக்டரை தைரியமாக ஏற்ற சரத்குமாருக்கு சபாஷ்! எப்போதும் சின்னதொரு சிந்தனையும் கவலையுமாகவே அடிபட்டதனத்தோடு பேசிப் பழகுகிற பாத்திரத்தை அணு அணுவாகப் பிரமாதப்படுத்திவிட்டார். கண்களாலேயே ஈட்டி சொருகிற கலையில் கை தேர்ந்த ஜோதிகா... 'சிலந்தி' என்று முதலில் வைத்திருந்த டைட்டிலுக்கு செம பொருத்தம்! தவணை முறையில் வரிவரியாகத் தன் 'கதை'யைச் சொல்லி சரத்குமாரின் அனுதாபத்தை அவர் திரட்டும் காட்சிகளில் ஜோர்திகா!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia