பஞ்சாபி காக்ரா![]() பஞ்சாபி காக்ரா (Punjabi: ਘੱਗਰਾ) என்னும் உடையை பஞ்சாபி பெண்கள் அணிகின்றனர். தலையில் போர்த்திக் கொள்ளும் துணி, மேலே உடுத்திக்கொள்ளும் குர்த்தா, கீழே அணித்து கொள்ளும் காக்ரா, பேண்ட்/கால்சட்டை போன்ற சல்வார்/சுத்தன் ஆகிய நான்கும் சேர்ந்ததே இந்த உடை[1][2][3] இந்த உடையை அரியானா, [4]இமாச்சலப் பிரதேசம்[5] ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் அணிகின்றனர். இந்த உடையை அணிந்துகொண்டு கித்தா நடனம் ஆடுகின்றனர்[6]. ஆடைபுல்காரிதலையில் போர்த்திக் கொள்ளும் துணியை புல்காரி என்று அழைக்கின்றனர். இதில் விதவிதமான அலங்கார வடிவங்கள் வரையப்பட்டிருக்கும். குர்த்தா/குர்த்தி/அங்கி/சோளிபஞ்சாபியர் குர்த்தா எனப்படும் மேலாடையை அணிந்து கொள்கின்றனர்.[7] நீளமான குர்த்தாவுக்கு பதிலாக நீளம் குறைந்த குர்த்தியை அணிவதும் உண்டு.[8]
மார்பகங்களை மட்டும் மறைக்கும் ரவிக்கை/ஜாக்கெட் போன்ற உடையை அங்கி என்றும், சோலி என்றும் அழைக்கின்றனர். இந்த உடை வயிற்றை மறைக்காது.[9] அங்கியை மட்டும் அணிந்தால் அதற்கு சோலி என்று பெயர்.[10] சோளியை பட்டுத்துணியால் நெய்வதும் உண்டு. இந்த துணி பல நிறங்களில் விற்பனையாகிறது[11]
காக்ராகாக்ராவை பட்டுத் துணியிலோ, முஸ்லின் என்ற துணியிலோ நெய்கின்றனர். இது 9 முதல் 25 யார்டு நீளம் இருக்கும்.[12]பஞ்சாபை சேர்ந்த அனைத்து மத பெண்களும் காக்ராவை அணிகின்றனர்.[13] இந்த துணியில் எம்பிராய்டரி எனப்படும் அழகு வேலைப்பாடுகளை காணலாம். சுத்தன்/சல்வார்காக்ராவுக்கு கீழே சுத்தன்/சல்வார் எனப்படும் ஆடைகளை அணிகின்றனர். பண்டிகை காலத்திலும், இழவு வீடுகளுக்குச் செல்லும் போதும், பெண்கள் காக்ரா அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[14] படங்கள்
இதனையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia