பன்சடா இராச்சியம்
![]() பன்சடா இராச்சியம் (Bansda State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பன்சடா இராச்சியம் 557 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 39,256 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. வரலாறு1780-ஆம் ஆண்டில் பன்சடா இராச்சியத்தை இராஜபுத்திர குல சோலாங்கி வம்சத்தின் இரண்டாம் வீரசிம்மன் நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பன்சடா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பன்சடா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது.[1] 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பன்சடா இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்பன்சடா இராச்சியத்தின் ஆட்சியாளர்களை பிரித்தானிய இந்தியா அரசு, மகாராஜா சாகிப் என்ற பட்டத்துடன் அழைத்தனர்.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia