பர்னாலா மாவட்டம்
பர்னாலா மாவட்டம் (Barnala district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பர்னாலா ஆகும். 2006-ஆம் ஆண்டிற்கு முன்னர் இம்மாவட்டம் சங்கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாவட்ட எல்லைகள்இம்மாவட்டத்தின் வடக்கில் லூதியானா மாவட்டம், வடமேற்கில் மொகா மாவட்டம், மேற்கில் பதிண்டா மாவட்டம், மற்ற திசைகளில் சங்கரூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்பர்னாலா மாவட்டம் பர்னாலா, தபா என இரண்டு வருவாய் வட்டங்களையும்; பர்னாலா, தனலவா, மெஹல் காலன் என மூன்று துணை வட்டங்களையும்; பர்னாலா, செஹ்னா, மெஹல் காலன் என மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், ஐந்து நகராட்சி மன்றங்களையும் கொண்டது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 595,527 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 67.98% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 32.02% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.02% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 317,522 ஆண்களும் மற்றும் 278,005 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். 1,482 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 402 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.57 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 63.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 64,987 ஆக உள்ளது. [2] சமயம்இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 467,751 (78.54 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 112,859 (18.95 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 13,100 (2.20 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. மொழிகள்பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia