இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
பலதேர்வுக் கேள்விகள் (Multiple Choice Question) என்பது இன்றைய காலகட்டத்தில் அடைவுத் திறனைச் சோதனையிடப் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். இ எல் தாண்டைட்டு (EL Thorndike) என்பவர் முதலில் அறிவியல் பூர்வமாக மாணவர்களின் அடைவுத்திறனை மதிப்பிட உத்திகளை உருவாக்கியிருந்தாலும் அவருடைய உதவியாளர் பெஞ்சமின் டி வுட் (Benjamin D wood) என்பவர்தான் பலதேர்வுக் கேள்வி முறையை உருவாக்கினார்.[1] 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் படி எடுக்கும் இயந்திரங்களும் கணினியும் வந்த பிறகு இம்முறை மிகவும் பிரபலமடைந்தது.[2]
முன்னுரை
இவை சுலபமாகப் பதிலளிக்கக் கூடியவை, பகுப்பாய்விற்கு உட்படக்கூடியவை. இத்தேர்வு முறையின் முக்கியமான குறிக்கோள் நன்கு படித்தவர்களையும் படிக்காமல் ஊகத்தின் பேரில் தேர்வு எழுதுபவர்களையும் பாகுபடுத்தி அறிவது ஆகும். இக்கேள்வி முறை திறன்களையும் அவற்றின் அடைவுகளையும் சுலபமாகக் அறியக் கூடியவை ஆகும். இவை நெகிழும் தன்மையுடையவை. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட திறனடைவை அறிய துல்லியமாகக் கேள்வி எழுப்ப முடியும்.[3] பெஞ்சமின் புளுமின் ( Benjamin Bloom) வகைப்பாட்டியலின் (Taxonomy) ஒவ்வொரு அம்சத்திலும் கேள்விகள் எழுப்பி அடைவுத் திறனைச் சோதிக்க முடியும். எடுத்துக்காட்டாக கீழே கண்ட கேள்வியின் மூலம் நினைவுத் திறனைச் சோதிக்க முடியும்
முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1526 ஆ) 1531 இ) 1541 ஈ) 1548
இவற்றில் அ) என்பது சரியான விடை. இதில் நினைவுத் திறனை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கும். வேறு திறனைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால் அடுத்த கேள்வியைக் காணவும்.
அக்பர் ஆட்சிக்கும், அவுரங்கசீப் ஆட்சிக்கும் பல ஒற்றுமை வேற்றுமை இருந்தன. குறிப்பாக
அ) இரண்டு ஆட்சிகளும் மதசகிப்புத் தன்மையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் விளங்கின.
ஆ) அவுரங்கசீப் அக்பரை விட சகிப்புத் தன்மையை மிகுதியாகக் கொண்டிருந்தார்.
இ) அக்பர் அவுரங்கசிப்யை விட மதச்சார்பின்மையையும் சகிப்புத் தன்மையையும் கொண்டிருந்தாா்
ஈ) மேலே கூறிய அனைத்தும் தவறு
இந்த கேள்வியில் நினைவுத் திறன் அல்லமால், சிந்திக்கும் திறனும் இரண்டு ஆட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறியும் திறனும் அறிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலிருந்து எவ்வாறு ‘பல தேர்வுக் கேள்விகள்’ எளிமையான கேள்வியிலிருந்து சிக்கலான கேள்வி வரை எழுப்பப் பயன்படும் என்பதை அறியலாம்.
கேள்வியின் பாகங்கள்
பலதேர்வுக் கேள்வியில் மூன்று பாகங்கள் உள்ளன. அவை[3]:
தண்டுப்பகுதி
சரியான விடை
மாற்று விடைகள் ஆகும்.
முதலாம் எடுத்துக்காட்டில், “முதலாம் பானிபட்போர் நடந்த ஆண்டு” என்பது கேள்வியின் தண்டுப்பகுதியாகும். மாற்றுவிடைகள் என்பவை அ முதல் ஈ வரை உள்ள விடைகளாகும். இதில் சரியான விடை என்பது ’அ’ ஆகும். இந்த நான்கு மாற்றுவிடைகளில் மூன்று தவறான விடைகளும் கவனத்தைத் திசை திருப்புபவை எனப்படும்.
இத்திசை திருப்புபவைகளின் நோக்கம் சரியாகப் படிக்காத அல்லது விடை தெரியாத தேர்வு எழுதுபவரைத் திசை திருப்ப வேண்டும் என்பதாகும். ஆனால் நன்கு படித்தவரை, விடைதெரிந்தவரை திசை திருப்பக்கூடிய அளவிற்கும் இருக்கக் கூடாது. நன்கு படித்து விடை தெரிந்தவரையும், படிக்காமல் ஊகிப்பவர்களையும் அனுமானிப்பவர்களையும் வேறு படுத்திக் காட்டுவதே பலதேர்வு கேள்வி முறையின் குறிக்கோள் ஆகும். இக்குறிக்கோளை அடைய இத்திசை திருப்பிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
ஆதலால் ஒரு சிறந்த பலதேர்வுக் கேள்வியின் மூன்று அம்சங்கள்:
சோதனை செய்ய வேண்டிய அடைவுத் திறனை தெளிவாக வெளிப்படுத்தும் தண்டுப்பகுதி
கவர்ச்சியூட்டுகிற மாற்று விடைகள்
மாற்று விடைகளில் திசைதிருப்பும் தவறான விடைகள் கவர்ச்சியுடையதாக இருத்தல்
சிறந்த கேள்விகளை உருவாக்கும் வழிமுறைகள்
மாற்று விடைகளை அடுத்தடுத்த வரியில் ஒன்றன்பின் ஒன்றாக எழுத வேண்டும். ஒரே வரியில் எழுதக்கூடாது.[3]
மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டில் பானிபட்டுப் போர் குறித்த கேள்வியில் மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் விதம் தவறானது. சரியான விதம்:
முதலாம் பானிபட்டு போர் நடந்த வருடம்
அ)1526
ஆ)1531
இ)1541
ஈ)1548
ஒவ்வொரு கேள்வியும் சோதனை செய்ய வேண்டிய அடைவுத் திறனைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
மாற்றுவிடைகளில் சரியான விடையைத் தாறுமாறாகக் கலக்க வேண்டும்.
இலக்கண சுத்தமாகவும் நிலைப்பேருள்ளதாகவும் (Consistent) கேள்விகள் எழுதப்பட வேண்டும்.
தொடர்கள் முழுமையில்லாமல் உருவாக்குதல் கூடாது.
தவறான அமைப்புக்கான எடுத்துக்காட்டு:
அப்துல்காலம் பிறந்த ஊர்
அ) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது
ஆ) ஆந்திர மாநிலத்திற்கு அருகில் இல்லாமல்
இ) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளதுபோல்
ஈ) வங்காள விரிகுடா அருகில்
இது போன்று தொடர்கள் முழுமையில்லாமல் உருவாக்குதல் கூடாது.
தண்டுப்பகுதி தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். தேர்வு எழுதுபவர் தெரிந்து கொள்ள வேண்டியபவைகளைத் தெளிவாக தண்டுப்பகுதியில் குறிப்பிட வேண்டும். தேவையில்லாமல் அவைகளை மாற்றுவிடையில் கூறக்கூடாது.
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டு:
ரியோடி ஜெனிரியோ நகரில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெற உள்ளது அங்கு
அ) தடகளத்திற்காக புதிய விளையாட்டரங்கம் அமைக்கப்படவுள்ளது.
ஆ) தடகளத்திற்காக ஏற்கனவே ஒரு விளையாட்டரங்கம் உள்ளது.
இ )உடற்பயிற்சிக்காக வேறு விளையாட்டரங்கம் உள்ளது.
ஈ )விளையாட்டரங்களில் என்ன விளையாட்டுகள் நடைபெறும் என்று முடிவுசெய்யப்படவில்லை
இந்த எடுத்துக்காட்டில் தண்டுப்பகுதியில் வர வேண்டிய செய்திகள் மாற்று விடைகளில் தேவையில்லாமல் நீளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு ஆகும்.
தண்டுப்பகுதியில் எதிர்மறையான (Negative), முழுமையான (absolutes) வெளிப்பாடு மற்றும் அடைவுகள் (Qualifiers) தவிர்க்க பட வேண்டியவை ஆகும். எடுத்துக்காட்டாக,
எப்பொழுதாவது வருவதோடல்லாமல் மழை வராமலிருப்பதும் உண்டு
அ) கோடைகாலங்களில்
ஆ) வெய்யில் காலத்தில்
இ) குளிர் காலத்தில்
ஈ) பனிக்காலத்தில்
மாற்று விடைகள் சாத்தியமானவையாக இருக்க வேண்டும். நான்கு மாற்று விடைகளில் இரண்டு சாத்தியமில்லாதவை என்றால் தேர்வு எழுதுபவர் சுலபமாக ஊகித்துவிடுவார்.
எடுத்துக்காட்டு:
64ம் எண்ணின் வர்க்க மூலம்
அ) 64
ஆ) 8
இ) 642
ஈ) முடிவிலி
இதில் இ மற்றும் ஈ தவறான விடை என்று சுலபமாக ஊகித்துவிட முடியும்.
ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியாக இருக்க வேண்டும். ஒன்று மற்றொன்றைச் சார்ந்ததாக இருக்க கூடாது. அப்படி இருந்தால் ஒன்றிற்குப் பதில் தெரிந்தால் மற்றொன்றையும் ஊகித்து விட முடியும்.
ஒரு சிறந்த மாதிரிக்கான எடுத்துக்காட்டு:
சென்னை நகரின் மக்கள் தொகை 2011 மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி
அ) 20 லட்சத்திற்கும் கீழ்
ஆ) 20 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை
இ) 30 லிருந்து 50 லட்சம் வரை
ஈ) 50 லட்சத்திற்கு மேல்
நிறையும் குறையும்
நிறைகள்
சிந்தனைத் திறனின் எந்த ஆழத்தையும் அகலத்தையும் பலதேர்வுக் கேள்வி முறையினால் பரிசோதிக்க முடியும். [3]
பலதேர்வு கேள்வி முறையின் குறிக்கோள் நன்றாகப் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் வேறுபடுத்துவது அல்லது பாகுபடுத்துவது ஆகும். உருவாக்கப்பட்ட கேள்விகள் இக்குறிக்கோளை அடைந்தனவா என்பது இரண்டு சுட்டெண்கள் மூலம் அறியப்படுகிறது. அவைகள் கடினச் சுட்டெண் மற்றும் வேறுபடுத்தும் சுட்டெண் என இருவகைப்படும்.[3] கேள்விகள் இத்தேர்வு முறையின் குறிக்கோளான படித்தவர்களையும், படிக்காதவர்களையும் பாகுபடுத்த வேண்டும் (discriminate) என்பதிலிருந்து வெற்றியடைந்ததா இல்லையா என்பதைப் இச்சுட்டு எண்களைக் கணக்கிடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை இதனை ஒரு கேள்வி நிறைவு செய்யாவிட்டால் கேள்வியைத் தகுந்தபடி மாற்றி அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும் தேர்வு எழுதியவர்கள் தேர்ந்தெடுத்த விடைகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் கேள்விகளின் தரத்தை அறிய முடியும். எடுத்துக்காட்டாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற அனைவரும் ஒரு கேள்விக்கு தவறான விடையைத் தேர்ந்தெடுத்திருந்தால் அக்கேள்வி பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதுபோலவே நல்ல மதிப்பெண்பெறாத அனைவரும் ஒரு கேள்விக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் இக்கேள்வியும் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பகுப்பாய்வு செய்யும் முறை
ஒரு தேர்வில் அனைவரும் தேர்வு எழுதியபின், மதிப்பெண் வாரியாக மேலிருந்து கீழாக அனைவரின் பெயரையும் அடுக்கிக்கொள்ள வேண்டும்.[3]
மேல் இருந்து கீழாக அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 27 விழுக்காட்டை ஒரு குழுவாகவும், கீழிருந்து மேலாக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களில் 27 விழுக்காட்டை ஒரு குழுவாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை அதிகமதிப்பெண் குழு எனவும் குறைந்த மதிப்பெண் குழு எனவும் அழைக்கலாம். 50 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலிருந்து கீழாக 27% அதாவது 14 மாணவர்களை அதிக மதிப்பெண் குழு என்றும், கீழிருந்து மேலாக 27% அதாவது14 மாணவர்களை குறைந்த மதிப்பெண் குழு என்றும் பிரித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு பரிசீலிக்கலாம்.
14 ஆவது கேள்வியை எடுத்துக் கொள்ளலாம்.
14 ஆவது கேள்வி
Alternatives
Group
பதில் a
பதில் b
பதில் c
பதில் d
மொத்தம்
அதிக மதிப்பெண் குழு
2
21
2
4
29
குறைந்த மதிப்பெண் குழு
2
5
6
8
21
Total
4
26
8
12
50
தேர்வு எழுதிய 50 மாணவர்கள் 14 ஆவது கேள்விக்கு அளித்த விடையின் தொகுப்பைப் பட்டியல் காட்டுகிறது. 50 மாணவர்கள் பதிலளித்ததில் 14 ஆவது கேள்விக்கு 26 மாணவர்கள் இரண்டாவது ‘b’ மாற்று விடையான சரியான விடையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 26 மாணவர்களில் 21 மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் குழுவைச் சார்ந்தவர்கள். 5 மாணவர்கள் குறைந்த மதிப்பெண் குழுவைச் சார்ந்தவர்கள் இதைப்போல 12 மாணவர்கள் தவறான மாற்று விடை ‘d’ ஐத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் 4 மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் குழுவையும் 8 மாணவர்கள் குறைந்த மதிப்பெண் குழுவையும் சேர்ந்தவர்கள். இந்த கேள்வியின் தரத்தைப் பரிசீலிப்பதற்கு மாற்று விடைகளில் சரியான விடையான ‘b’ ஐத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமாகும்.
கடினச்சுட்டு எண் கணக்கிடும் முறை
கடினச்சுட்டு எண் (Difficulty Index) இக்கேள்வி எவ்வளவு கடினமாக உருவாக்கப்பட்டுள்ளது. என்பதைக் காட்டும்.[3] இது இந்த கேள்விக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தவர்கள் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு என்பதைக் காட்டும். இதற்கான விதிமுறை
D = கடின அளவு
N(h) = உயர் மதிப்பெண் குழுவில் உள்ள சரியான விடை அளித்தவர்கள்
N(l) = குறைந்த மதிப்பெண் குழுவில் உள்ள சரியான விடை அளித்தவர்கள்
T = இக்கேள்விக்கு விடை அளித்த மொத்த மாணவர்கள்
விதிமுறையில் மேலுள்ள பட்டியல் தரும் எண்களை இட்டு நிரப்பினால்
= 52%
52 விழுக்காடு மாணவர்கள் 14-ஆம் கேள்விக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இங்கு கடினச்சுட்டு எண் 52 %. கடினச் சுட்டு எண் 100 விழுக்காடாக இருந்தால் அனைவரும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் ஆதலால் கேள்வி மிகவும் சுலபமானது என்றும் பொருள். நன்றாகப் படிக்காதவர்கள் கூட ஊகித்துப் பதில் எழுத முடிந்தது என்று பொருளாகும். ஒருவேளை கடினச் சுட்டு எண் ’0’ வாக இருந்தால் யாரும் இக்கேள்விக்கு சரியான விடை அளிக்கவில்லை என்று பொருள். இக்கேள்வி மிகவும் கடினமானது என்று கொள்ள வேண்டும்.
வேறுபடுத்தும் சுட்டு எண் கணக்கிடும் முறை
வேறுபடுத்தும் சுட்டு எண் (Discrimination Index) எந்த அளவு ஒரு கேள்வி உயர்ந்த மதிப்பெண் குழுவையும், குறைந்த மதிப்பெண் குழுவையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளது என்பதை உணர்த்தும். இதன் விதிமுறை பின்வருமாறு:
D = வேறுபடுத்திக் காட்டும் அளவு
N(h) = உயர் மதிப்பெண் குழுவில் உள்ள சரியான விடை அளித்தவர்கள்
N(l) = குறைந்த மதிப்பெண் குழுவில் உள்ள சரியான விடை அளித்தவர்கள்
T = இக்கேள்விக்கு விடை அளித்த மொத்த மாணவர்கள்
விதிமுறையில் பட்டியலிலிருந்து பெறப்பட்ட எண்களை இட்டு நிரப்பினால்
= 0.64
வேறுபடுத்திக் காட்டும் சுட்டுஎண் தசமத்தில் தான் காண்பிக்கப்படும். இச்சுட்டு எண் நேர்மறை (Positive) யாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும். நேர்முறையாக இருந்தால் இந்தக் கேள்விக்கு சரியான விடையளித்தவர்கள் பெரும்பாலோனர் உயர்ந்த மதிப்பெண் குழுவினர் என்று பொருள். இது எதிர்மறையாக இருந்தால் பெரும்பாலோனர் குறைந்த மதிப்பெண் குழுவிலிருந்தோர் என்று பொருள். இச்சுட்டு நேர்மறையாக இருந்தால் இக்கேள்வியை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் எதிர் மறையாக இருந்தால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு சுட்டு எண்களை இணைத்து பகுப்பாய்வு
நல்ல முறையில் படித்தவர்களையும் படிக்காமல் படிக்காமல் தேர்வு எழுதியவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் கேள்விக்கு வேறுபடுத்திக் காட்டும் சுட்டு எண் 1.00 ஆக இருக்கும்.
சிறந்த முறையில் உருவாக்கப் பட்ட கேள்வி இரண்டு நிபந்தகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.[3]
கடினச் சுட்டு 50%ஐச் சுற்றி இருக்க வேண்டும். அதாவது பதிலளித்தவர்களில் 50 % மாணவர்கள் சரியாகவும், 50% மாணவர்கள் தவறாகவும் விடை அளித்திருக்க வேண்டும்.
வேறுபடுத்திக் காட்டும் சுட்டு எண் 1.00 ஆக இருக்க வேண்டும். அதாவது சரியாக விடை அளித்த 50% மாணவர்களும் அதிக மதிப்பெண் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
100% முழு நிறைவான கேள்வியை உருவாக்குவது கடினமென்றாலும் நடைமுறையில் சுட்டுஎண்களின்மதிப்பு, இந்த மதிப்புகளை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்
பல தேர்வுக்கேள்விகள் இரு சுட்டு எண்களுடன் வரைபடம்.கேள்விகள் நட்சத்திரக் குறிகளாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. கேள்வியின் எண்ணும் அருகிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சரியான கேள்வி எண் 5, சிரித்த முகமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
வரைபடத்திலிருந்து:
மிகச் சரியான கேள்வி எண் 5. இக்கேள்வியின் கடினச் சுட்டு எண் 50% க்கு அருகிலும் வேறுபடுத்திக்காட்டும் சுட்டு எண் 1.00 க்கு அருகிலும் இருக்கிறது.
முதல் கேள்விக்கு கடினச் சுட்டு எண் 25% ம், வேறுபடுத்தி காட்டும் சுட்டு எண் 0.50 அளவிலும் உள்ளது. இதன் பொருள் கேள்வி ஓரளவு கடினமாக இருந்தாலும் சரியான விடை அளித்தவர்கள் 50% அதிக மதிப்பெண் குழுவில் உள்ளவர்களே.
கேள்வி எண் இரண்டிற்கு கடின சுட்டு எண் 75% ம் வேறுபடுத்திக் காட்டும் சுட்டு எண் 50% ம் உள்ளது. கேள்வி சுலபமாக இருந்துள்ளது. 50% வேறுபடுத்தி காட்டியுள்ளது. ஆகவே ஏற்றுக் கொள்ளலாம்.
கேள்வி மூன்றும் நான்கும் கடின அளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் வேறுபடுத்திக் காட்டும் சுட்டு எண் எதிர் மறையாக உள்ளதால் அவை சரியாக வேறு படுத்தவில்லை. ஆதலால் இக்கேள்விகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியவை.
கேள்விகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றால் அவை விதிகளைப் பின்பற்றி எழுதப்படவில்லை என்று பொருள். விதிகளைப் பின்பற்றி மாற்றி அமைக்கப்படவேண்டும்
பலதேர்வுக் கேள்விமுறையில் நடத்தப்படும் முக்கியமான தேர்வுகள்
ACT (examination)
AIEEE in India
Advanced Placement Program
Armed Services Vocational Aptitude Battery
American Mathematics Competitions
American Registry of Radiologic Technologists
Australian Mathematics Competition
Chartered Financial Analyst
CISSP
COMLEX
Common Law Admission Test
United States National Physics Olympiad#Exam Procedure for Selection of the U.S. Physics Team|F = ma
Fundamentals of Engineering exam
Graduate Record Examination GRE
Graduate Aptitude Test in Engineering GATE
IB Diploma Programme- science subject exams
IIT-JEE in India, which had, until 2006, a high-stakes phase after the initial MCQ based screening phase.
Law School Admission Test LSAT
MCAT
Multistate Bar Examination
NCLEX
Professional and Linguistic Assessments Board-PLAB for non-EEA medical graduates to practise in the UK
↑Beckert, L., Wilkinson, T. J., & Sainsbury, R. (2003). A needs-based study and examination skills course improves students' performance Medical Education 37 (5), 424–428. எஆசு:10.1046/j.1365-2923.2003.01499.x