பலார்சா சந்திப்பு தொடருந்து நிலையம்
பலார்சா சந்திப்பு தொடருந்து நிலையம் (Balharshah Junction Railway Station)(நிலையக் குறியீடு: BPQ ) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் நகரத்திற்குச் சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் சிஆர் ரயில்வே பிரிவின் கீழ் உள்ளது. இந்திய ரயில்வேயின் புது தில்லி-சென்னை முதன்மை வழித்தடத்தில் உள்ள முக்கியமான சந்திப்பாகும். இது கடல் மட்டத்திலிருந்து 185 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன். பல்லர்சா-வர்தா-நாக்பூர் பிரிவு 1989இல் மின் மயமாக்கப்பட்டது. [1] வரலாறு1929இல் பல்ஹார்சா-காசிபேட் இணைப்பு பணி முடிந்தவுடன் சென்னை நேரடியாகத் தில்லியுடன் இருப்புப் பாதைமூலம் தொடர்புப்படுத்தப்பட்டது.[2] 1908ஆம் ஆண்டில் கோண்டியா-நாக்பீர்– நாக்பூர் இரயில் போக்குவரத்துக்காகப் பயணத்திற்காகத் திறக்கப்பட்டது. நாக்பீர்-ராஜோலி பாதை 1913இல் திறக்கப்பட்டு சாந்தா கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. [3] 240 km (149 mi) நீள கோண்டியா-சாந்தா கோட்டை குறுகிய பாதையானது டிசம்பர் 1992இல் அகலப்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. நாக்பீர்-சந்தா கோட்டை பகுதியை உள்ளடக்கிய நான்காவது கட்ட அகலப்பாதைப் பணி ஜனவரி 13, 1999 அன்று முடிவடைந்து உபயோகத்திற்காகத் திறக்கப்பட்டது. சாந்தா கோட்டை-பல்ஹர்சா பிரிவு ஜூலை 2, 1999 முதல் திறக்கப்பட்டது.[4] இராமகுண்டம்-பல்ஹர்சா-வர்தா-நாக்பூர் பகுதி 1988-89ல் மின் மயமாக்கப்பட்டது.[5] கோண்டியா - நாக்பீர் - பல்ஹர்சா பாதையானது 2018 இல் மின் மயமாக்கப்பட்டது. வசதிகள்இந்த இரயில் நிலையத்தில் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம், பொது தொலைப்பேசி நிலையம், ஓய்வு எடுக்கும் அறை, காத்திருப்பு அறை, சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டிச் சாலை மற்றும் புத்தகக் கடைகள் உள்ளன. [6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia