பள்ளப்பட்டி சடையக் கவுண்டர் கைலாசம்பள்ளப்பட்டி சடைய கவுண்டர் கைலாசம் (Palapatti Sadaya Goundar Kailasam)(12 செப்டம்பர் 1915-10 ஆகஸ்ட் 1986) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] கல்விகைலாசம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். 1935-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் இளநிலையில் தேர்ச்சி பெற்றார். 1937-ல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் 1965-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக சிறிதுகாலம் பணியாற்றினார். நீதிபதி பணிகைலாசம் 20 அக்டோபர் 1960-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி ஆனார். ஏப்ரல் 8, 1976-ல் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[2] நீதிபதி கைலாசம் 1977-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் செப்டம்பர் 12, 1980 அன்று பணி ஓய்வு பெற்றார்.[3] குடும்பம்நீதியரசர் கைலாசம், தமிழ் கவிஞர் சௌந்தர கைலாசத்தினை மணந்தார். இவருடைய மகள் நளினி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவியாவார்.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia