பாக்மாரா
பாக்மாரா (Baghmara), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள தெற்கு காரோ மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்தியா-வங்காளதேசம் எல்லையில் பாயும் சோமேசுவரி ஆற்றின் கரையில் அமைந்த இந்நகரம், மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்மேற்கில் 256 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான சுஜு குகை[1]இந்நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும்; பால்பாக்ராம் தேசியப் பூங்கா 66 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள தில்சா மலையில் உள்ளது. இங்குள்ள மலைக்காடுகளில் ஊணுண்ணித் தாவரமான தாவரக் குடுவைகள் அதிகம் வளர்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், 2,351 குடியிருப்புகளும் கொண்ட பாக்மரா நகராட்சியின் மக்கள் தொகை 13,131 ஆகும். அதில் 6,700 ஆண்கள் மற்றும் 6,431 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.8% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 11,169 ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 14.3%, இசுலாமியர் 1.13%, கிறித்தவர்கள் 84.36% மற்றும் பிற சமயத்தினர் 0.20 % வீதம் உள்ளனர்.[2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia