பாபநாசம் குறள்பித்தன்பாபநாசம் குறள்பித்தன் (பிறப்பு: த. வெ. கண்ணன், 19. சூலை 1947- 2017) என்பவர் ஒரு தமிழக குழந்தை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின், பாபநாசத்தில் தனம், வெங்கிடாசலம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தஞ்சாவூர் கரந்தை புலவர் கல்லூரியில் பயின்றார். எழுத்துப் பணியில் ஆர்வம் கொண்ட இவர் 1965 இல் முதன் முதலில் சுதேசமித்திரன் நாளிதழில் முதன் முதலில் எழுதினார். ம.கோ.இரா நடத்தி வந்த "தாய்' வார இதழில் துணையாசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் சிறுவர் நூல்கள், ஆன்மிக நூல்கள, நாடக நூல்கள், கவிதை நூல்கள், போன்ற பல்துறை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் “சிறுவர் இலக்கியம்” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இவரது மரபுரிமையாளர்களுக்கு ரூ 5 இலட்சம் பரிவுத் தொகை அளிக்கப்பட்டு இவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.[1][2] பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia