பாலகுமாரன் மகாதேவா
பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா[1] (Balakumara Mahadeva பாலகுமாரா மகாதேவா, 29 அக்டோபர் 1921 – 29 நவம்பர் 2013) என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார். ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்பாலகுமாரா அருணாசலம் மகாதேவா, சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29 இல் பிறந்தவர்.[2][2][3] இவருடன் உடன் பிறந்தவர் சுவர்ணம் நடராஜா. சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் பேரன் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர்.[4][5] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் இலண்டன் பல்கலைக்கழகம் சென்று கணிதத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.[6] மகாதேவா சேக தியாகராஜாவின் மகள் சுந்தரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1][2] இவர்களுக்கு ஆனந்தகுமார், ஈசுவரி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[1] பணிமகாதேவா இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், 1945 சனவரியில் இலங்கைக் குடிமை சேவையில் இணைந்தார்.[2][6] 1949 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சில் துணைச் செயலராகவும், 1952 இல் காணி அமைச்சில் துணைச் செயலராகவும், 1958 இல் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சில் நிரந்தர செயலராகவும் பணியாற்றினார்.[2][3] அத்துடன் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[3][7] திறைசேரியில் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பிற்கால வாழ்க்கைகுடிமைப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் இவர் மலேசியாவில் ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றினார்.[6][8] பின்னர் இலங்கையில் தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராகவும், இலங்கை மக்கள் வங்கியின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] பல தனியார் நிறுவனங்களில் தலைவராக இருந்தார்.[9][10] சமூகப் பணிமகாதேவா கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயில், முகத்துவாரம் அருணாசலேசுவர கோயில் ஆகியவற்றின் அறங்காவல் சபைத் தலைவராக செயல்பட்டார்.[3] 1990 ஆம் ஆண்டில் இவருக்கு இலங்கை அரசின் இரண்டாவது பெரும் தேசிய விருதான தேசமானிய பட்டம் வழங்கப்பட்டது.[11] மகாதேவா 2013 நவம்பர் 29 இல் கொழும்பில் காலமானார்.[3][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia