பினாங்கு நகர விளையாட்டரங்கம்
பினாங்கு நகர விளையாட்டரங்கம் ஆங்கிலம்: Penang City Stadium; மலாய்: Stadium Bandaraya Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பல்நோக்கு மைதானமாகும். மேலும் இது பினாங்கு மாநில கால்பந்து அணியான பினாங்கு எப் சி-க்குச் சொந்த மைதானமாக செயல்படுகிறது. மலேசியாவில் பயன்பாட்டில் உள்ள பழைமையான விளையாட்டு அரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அரங்கம் 1932-இல் பிரித்தானிய அரசாங்கத்தால் கட்டப்பட்டது[2]. சுமார் 25,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட இந்த அரங்கம் தற்போது கால்பந்து போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது வரலாறுபினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம்விளையாட்டரங்கத்தின் கட்டுமானம் 1 அக்டோபர் 1945 அன்று இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தொடங்கியது. 1948-இல் முடிந்ததும், அதிகாரப்பூர்வமாக பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் என பெயரைப் பெற்றது. 1950-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தால் இந்த மைதானம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் 1953 ஆம் ஆண்டு மேலும் புதுப்பிக்கப்பட்டது. நகர விளையாட்டரங்கம்பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் 2003-இல் நகர விளையாட்டரங்கம் என மறுபெயரிடப்பட்டது. 2000-களில் மற்றொரு சுற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia