பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் ( PMUY, மொழிபெயர்ப்பு: பிரதம மந்திரி விளக்கு திட்டம்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 1 மே 2016 அன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க தொடங்கப்பட்டது.[1][2][3]₹80 பில்லியன் (ஐஅ$930 மில்லியன்) பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்காக செய்யப்பட்டது.
கண்ணோட்டம்
தொடங்கப்பட்ட முதல் ஆண்டில், 15 மில்லியன் என்ற இலக்குக்கு எதிராக 22 மில்லியன் இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன. 23 அக்டோபர் 2017 நிலவரப்படி, 30 மில்லியன்(3கோடி) இணைப்புகள் விநியோகிக்கப்பட்டன, அவற்றில் 44% தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.[4] டிசம்பர் 2018க்குள் இந்த எண்ணிக்கை 58 மில்லியனைத்(5.8கோடி) தாண்டியது [5]
2018 ஆம் ஆண்டு இந்திய யூனியன் பட்ஜெட்டில், அதன் நோக்கம் 80 மில்லியன் (8கோடி) ஏழை குடும்பங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.[6] 21,000 விழிப்புணர்வு முகாம்கள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் (OMC) நடத்தப்பட்டன.[5] இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் எல்பிஜி நுகர்வு 56% அதிகரிக்க வழிவகுத்தது [7]
மிகவும் பிரபலமான இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் 14.6 மில்லியன்(1.46கோடி) BPL குடும்பங்கள், மேற்கு வங்கத்தில் 8.8 மில்லியன்(0.88கோடி) , பீகாரில் 8.5(0.85 கோடி) மில்லியன், மத்திய பிரதேசத்தில் 7.1 மில்லியன்(0.71கோடி) மற்றும் ராஜஸ்தானில் 6.3 மில்லியன் (0.63 கோடி) குடும்பங்கள் பயனடைந்துள்ளன.[8][9]
2016 ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் 1.61கோடி(80.08%) குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் பெற்றிருந்தனர். இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 32.43 இலட்சத்திற்கும்(3.24 மில்லியன்) அதிகமானோர் பலன்பெற்றனர். 2019ல், 2.02கோடி(97.09%) குடும்பங்கள் எரிஉருளை பெற்றிருந்தனர்.[10][11]
2019 செப் 7ம் தேதி அன்று, இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி நரேந்திர மோதி 8வதுகோடி பயனாளிக்கு எரி உருளை வழங்கினார்.[12]
2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1 கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. உஜ்வாலா முதல் திட்டத்தில் விடுபட்டு போன 1கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கும் உஜ்வாலா திட்டம் II-னை பிரதம மந்திரி 10 ஆகத்து 2021 அன்று துவக்கி வைத்தார்.[13]
2020 ஜனவரியில் பெங்களூருவில் நடைபெற்ற 107வது இந்திய அறிவியல் காங்கிரஸில், “இன்னும் சமையலுக்கு நிலக்கரி அல்லது மரத்தைப் பயன்படுத்தும் 8 கோடி [80 மில்லியன்] பெண்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும், புதிதாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு உதவியிருக்கிறது என்று நரேந்திர மோடி அறிவித்தார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் விநியோக மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.[14]
30 திசம்பர் 2023ல், பிரதமர் நரேந்திர மோதி உஜ்வாலா திட்டத்தின் 10வது கோடி பயனாளியின் வீட்டுக்கு சென்றார்.[15]
தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் PMUY காரணமாக தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நிரூபிக்கின்றன. தூய்மையான எரிபொருளுக்கான அணுகலில் ஆண்டு வளர்ச்சி 2015 ஆம் ஆண்டில் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது, 2015 க்கு முன் கிராமப்புறங்களில் 0.8% ஆக இருந்தது, பின்னர் 5.6% ஆக இருந்தது.[16]
மே 2016-இல், 62 சதவீதமாக இருந்த இந்தியவின் எரிஉருளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது 1 ஏப்ரல் 2021 இல் 99.8% ஆக மேம்பட்டுள்ளது.[9]
புள்ளிவிவரம்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு, கட்டமைப்பினை சீரமைப்பதின் மூலம் கடை நிலையிலுள்ள பயனாளிகளையும் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது எளிது, அதனால் அரசாங்கம் கட்டமைப்புகளை சீரமைப்பதிலும் முனைந்தது. அதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகளும் பெருக்கப்பட்டன.[17]
பொருள்
1 ஏப்ரல் 2014
1 ஏப்ரல் 2022
வளர்ச்சி சதவீதம் %
எரிஉருளை பாட்டில் நிரப்பும் கூடம் (Nos)
186
202
9%
எரிஉருளை நிரப்பும் திறன் (TMPTA)
13535 TMPTA
21573 TMPTA
59%
பொருள்
1 ஏப்ரல் 2014
1 ஏப்ரல் 2022
வளர்ச்சி சதவீதம் %
மொத்த விநியோகஸ்தர்கள் (Nos)
13896
25269
82%
கிராமப் பகுதிகளுக்குரிய விநியோகஸ்தர்கள் (Nos)
6724
17375
158%
பொருள்
1 ஏப்ரல் 2014
1 ஏப்ரல் 2022
வளர்ச்சி சதவீதம் %
வீட்டுப் பயனாளிகள் (கோடி)
14.52
30.53
110%
உஜ்வாலா பயனாளிகள் (கோடி)
0
9
பொருள்
1 ஏப்ரல் 2014
1 ஏப்ரல் 2022
வளர்ச்சி சதவீதம் %
வீட்டு உபயோக எரிஉருளை விற்பனை (TMT)
16041 TMT
25502 TMT
59%
மொத்த எரிஉருளை விற்பனை (வணிக விற்பனை உட்பட)
17639 TMT
28577 TMT
62%
புள்ளிவிவரம் உஜ்வாலா திட்டம் I
2019 செப் 7 அன்று, உஜ்வாலா திட்டம் I-ன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 8கோடியை தொட்டது.
பயனாளிகளின் எண்ணிக்கை மாநிலங்கள் வாரியாக பின்வருமாறு.[9][18]
வ.எண்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்
31-03-2017 அன்று வெளியிடப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை
22-05-2019 அன்று வெளியிடப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை
மொத்த இணைப்புகள்
1
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
1,189
7878
9,067
2
ஆந்திரப்பிரதேசம்
63,428
343221
406,649
3
அருணாச்சலப்பிரதேசம்
39565
39565
4
அசாம்
2
2837505
2837507
5
பீகார்
2,476,953
7898945
10,375,898
6
சண்டீகர்
88
88
7
சத்தீசுகர்
1,105,441
2692109
3,797,550
8
தாத்ரா மற்றும் நாகர்வேலி
3,211
14106
17,317
9
டாமன் & டையூ
73
423
496
10
தில்லி
516
73555
74071
11
கோவா
954
1070
2024
12
குசராத்
752354
2522246
3274600
13
அரியானா
278751
679727
958478
14
இமாச்சலப்பிரதேசம்
1,601
112889
114,490
15
சம்மூகாசுமீர்
265,787
1065226
1,331,013
16
சார்கண்ட்
536912
2892151
3429063
17
கருநாடகம்
15,840
2820262
2,836,102
18
கேரளம்
11,241
209826
221,067
19
இலட்சத்தீவுகள்
-
289
289
20
மத்தியப்பிரதேசம்
2,239,821
6443604
8,683,425
21
மகாராட்டிரம்
858808
4070602
4929410
22
மணிப்பூர்
25
130922
130947
23
மேகாலயா
140252
140252
24
மிசோரம்
25722
25722
25
நாகலாந்து
49462
49462
26
ஒதிசா
1011955
4229797
5241752
27
புதுச்சேரி
760
13388
14148
28
பஞ்சாப்
245008
1208880
1453888
29
ராசுத்தான்
1722694
5697192
7419886
30
சிக்கிம்
7782
7782
31
தமிழ்நாடு
272749
3147742
3420491
32
தெலுங்கானா
41
923911
923952
33
திரிபுரா
238221
238221
34
உத்திரப்பிரதேசம்
5,531,159
12959693
18,490,852
35
உத்திரகாண்ட்
113866
352768
466634
36
மேற்கு வங்காளம்
2,520,479
8061694
10,582,173
இந்தியா
20,031,618
64013768
91,944,331
உஜ்வாலா திட்டத்தின் மானியம்
கேபினட் அமைச்சரவை வருடந்தோரும் 14.5கி எடையுள்ள 12 எரிஉருளைகளுக்கு ரூ.200 மானியமாக கொடுக்க ஒப்பதளித்தது.
2022-23 நிதியாண்டில் மொத்த செலவு ரூ.6,100 கோடியாகவும், 2023-24ல் ரூ.7,680 கோடியாகவும் இருக்கும்.
PMUY நுகர்வோரின் சராசரி LPG நுகர்வு 2019-20ல் 3.01 ரீஃபில்களில் இருந்து 2021-22ல் 3.68 ஆக அதிகரித்துள்ளது.[19][20]
2023 அக்டோபர் மாதத்திலிருந்து ரூ.300 மானியமாக வழங்கப்படுகின்றது. சராசரி எரிவாயு உருளை நுகர்வு 2022-23ல் 3.71 ஆகவும், 2023-24ல் 3.8 ஆகவும் அதிகரித்துள்ளது.[21]
வரலாறு
16 அக்டோபர் 2009 இல், இந்திய அரசு RGGLV (ராஜீவ் காந்தி கிராமின் LPG விதாரக் யோஜனா) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இந்த திட்டத்தின் நோக்கமானது எரிஉருளை ஊடுருவலை அதிகரிக்கவும் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகஸ்தர்களை நிறுவுவதாகும்.[22]
2009 ஆம் ஆண்டில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு (பிபிஎல்) LPG இணைப்புகளுக்கு ஒரு முறை நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கத்தின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCs) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது.
2015ல் ராஜிவ்காந்தி கிராமின் எரிஉருளை விதாரக் திட்டம் நிறுத்தப்பட்டது.[23]
2009லிருந்து 2016 வரை, உஜ்வாலா திட்டத்திற்கு முன்பே 1.62கோடி குடும்பங்களுக்கு எரிஉருளை வழங்கப்பட்டிருந்தது.
மூன்று தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் (தமிழ்நாட்டில் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பத்திற்கு 29,38,907 எரிஉருளை இணைப்புகளும், புதுச்சேரியில் 85,437 எரிஉருளை இணைப்புகளும், ஆந்திரப் பிரதேசத்தில் தீபம் திட்டத்தின் கீழ் 35,04,653 எரிஉருளை இணைப்புகளும் மற்றும் தெலங்கானாவில் தீபம் திட்டத்தின் கீழ் 22,25,078 இணைப்புகளும்) மொத்தமாக 87,54,075 இலவச எரிஉருளை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
31 மார்ச் 2016 அன்று பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் வறுமைகோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட எரிஉருளை வாங்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டது.[24]
மேலும் பார்க்கவும்
டிஜிலாக்கர் (ஆன்லைன் அடையாளச் சான்று மற்றும் சேவைகளுக்கான எளிதான அணுகல்)