பிரதம மந்திரி மலிவு விலை மருந்துகள் திட்டம்
பிரதம மந்திரி இந்திய மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா - PMBJP) என்பது இந்திய நாட்டின் மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விற்பதற்காக இந்திய அரசின் மருந்தியல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இவை பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா கேந்திரா (PMBJK) என்றழைக்கப்படும் மக்கள் மருந்தகத்தின் மூலம் விற்பனையில் ஈடுபடுகின்றன.[1] பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்து திட்டம், மருந்தகக் கடைகளில் பொதுவான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவை தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் விலையுயர்ந்த தரமிக்க மருந்துகளுக்கு இணையானவையாகும். மத்திய அரசின் மருந்துத் துறையின் கீழ், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களின் ஆதரவுடன், இந்த மையங்கள் மூலம் பொதுப்படையான மருந்துகளின் கொள்முதல், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்க இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம் (பிபிபிஐ) ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் அப்போதைய ஐ.மு.கூ அரசால் தொடங்கப்பட்டது. 2014 மார்ச் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 80 கடைகள் மட்டுமே துவங்கப்பட்டு இயங்கி வந்தது. 2008 முதல் 2014 வரை ஐ.மு.கூ அரசாங்கத்தின் இரண்டாம் ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 100 பொதுவான மருந்துகளே இந்த திட்டத்தின் கீழ் இருந்தன.[2] 2015 செப்டம்பரில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், "பிரதான் மந்திரி ஜன் ஔசதி யோஜனா" என மறுபெயரிட்டு மீண்டும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" என்ற தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் இம்மருந்துகளை விற்பனை செய்வதாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 2016 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க, மீண்டும் "பிரதான் மந்திரி பாரதிய ஜனௌசதி பரியோஜனா" (PMBJP) எனப் பெயர் மாற்றப்பட்டது.[3]அதன்படி 2016 நவம்பர் 2ஆம் தேதி, தமிழ்நாட்டின் முதன் மக்கள் மருந்தகம் கோயம்புத்தூரில் திறக்கப்பட்டது.[4] 2014 முதல் 2017 வரை, 636 மருந்துகள் மற்றும் 132 அறுவை சிகிச்சை/நுகர்வுப் பொருட்கள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[5] 2019ல் ஜன் ஔசதி சுவிதா ஆக்சோ-பயோடிகிரேடபிள் சானிடரி நாப்கின்கள் 1 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடக்கத்தில் இருந்து, 2023ம் ஆண்டு பிப்ரவரி வரை 35.26 கோடிக்கும் அதிகமான ஜனஉசதி சுவிதா சானிட்டரி பேடுகள் கேந்திரங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[6][7] 30 நவம்பர் 2023 இல் இத்திட்டத்தின் 10,000 ஆவது மருந்தகம், ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.[8] காலவரிசை
தாக்கமும் & விளைவுகளும்
திட்ட நோக்கம்தரமான பொது மருந்துகள் இந்திய மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், துவங்கப்பட்ட இந்த மலிவு விலை மக்கள் மருந்தக திட்டத்தில் 30.11.2023 நிலவரப்படி, நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களில் 1,965 மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. இதன் நோக்கமாக
சிறப்பம்சங்கள்இத்திட்டம் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் முனைவோரால் மக்கள் மருந்தகம் வழியே இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia