பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)

பிரதாப முதலியார் சரித்திரம்
அட்டைப்படம்
நூலாசிரியர்மாயூரம் வேதநாயகம் பிள்ளை
நாடுதமிழ்நாடு, இந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியிடப்பட்ட நாள்
ஆகத்து 23, 1879[1]

பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவரைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளைத் திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.

மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876-இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன.[1]

இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பார்த்தசாரதி, நா. (26-08-1979). "தமிழ் நாவலுக்கு வயது நூறு!". ஆனந்த விகடன். 

வெளி இணைப்புகள்

விக்கிமூலத்தில் இந்த நாவலின் முழு தொகுப்பு உள்ளது:
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya