பிரமனூர் கைலாசநாதர் கோவில்
'பிரமனூர் கைலாசநாதர் கோவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் [1] அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். மதுரையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் இது அமைந்துள்ளது. ஊர் சிறப்புபிரம்மதேவன் பூலோகம் வந்து கைலாய மலையிலிருந்து இறைவனை ஆராதனை செய்து லிங்கம் கொண்டுவந்து வணங்கி பூசித்தான். தன் திருநாமம் இந்த ஊருக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படக் காரணமாயிற்று. தல வரலாறுஇறைவன் திருவிளையாடல் பல, அதில் அடிமுடி காணும் படலத்தின் வாயிலாக இறைவனின் சிறு திருவிளையாடல். காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கும், படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்குமிடையே யார் பெரியவன் என்ற போட்டி ஏற்படுகிறது. இதை தீர்த்துவைக்க யாராலும் முடியவில்லை. அப்போது சிவபெருமான் நெருப்பு மலையாக தோன்றி காட்சி தருகிறார். இருவருக்கும் சர்ச்சை தீரவில்லை. உடனே சிவபெருமான் "யார் ஒருவர் என் சிரசையோ அல்லது பாதத்தையோ விரைவாக தரிசனம் செய்கிறாரோ அவரே பெரியவர் எனக்கூற, காக்கும் கடவுளாகிய விஷ்ணு பன்றி உருவம்பூண்டு பூமியை துளைத்து பாதத்தைப் பார்க்க செல்கிறார். படைக்கும் கடவுள் பிரம்மன் அன்ன வாகனம்பூண்டு ஆகாயம் நோக்கி முடியைக்காணச் செல்கிறார். ஆயினும் அவர்களால் சிவனின் சிரசையோ அல்லது பாதத்தையோ தரிசிக்க முடியவில்லை. பிரம்மதேவன் செல்லும் வழியில் சிவனின் சிரசிலிருந்து விழும் தாழம்பூவைச் சந்திக்க நேர்கிறது. உடனே பிரம்மன் தாழம்பூவிடம் தாம் சிவனின் சிரசைப் பார்த்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். தாழம்பூவும் சம்மதிக்கிறது. அதே சமயம் விஷ்ணுவோ எவ்வளவு முயன்றும் தம்மால் சிவனின் பாதத்தைக் காணமுடியாதது கண்டு தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைகிறார். பிரம்மதேவனோ தனக்கு சாட்சியாக தாழம்பூவை வைத்து சிரசை பார்த்ததாக கூற இறைவன் கோபம் கொண்டு பிரமனுக்கும் தாழம்பூவுக்கும் சாபம் கொடுக்கிறார். எனவே தான் பிரம்மதேவனை மூலவராகக் கொண்டு கோவில்களில் வழிபடும் பழக்கமில்லை. சாப விமோசனம்சாபவிமோசனம் வேண்டி நீ என்னை பூலோகம் சென்று வழிபட வேண்டும் எனவும், தாழம்பூ இனி சிவபூஜைக்கு ஆகாது எனவும் சிவபெருமான் கூறுகிறார். பிரம்மதேவன் கைலாயமலை சென்று அம்மை அப்பனை வணங்கி லிங்கம் கொண்டுவந்து வைத்து இத்தலத்தில் ஆராதனை செய்தமையால் இங்குள்ள மூலவர் கைலாசநாதர் எனப்படுகிறார். ஆலயச்சிறப்புஇங்கு இறைவனுக்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது மற்றும் எல்லா விஷேட காலமும் பூஜை நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று தாழ மரத்தை நடுவில் ஊன்றி சொக்கப்பனை ஏற்றுவது இங்கு தனிச்சிறப்பு. ஊரின் சிறப்புக்கென உள்ள பாடலொன்று உள்ளது(செவிவழி கவிதை) பாடல் பதினான் கென்ற பாண்டித் தலமதிலே தனிச்சிறப்புஇவ்வாலயத்தில் சூரிய பகவான் சிலை மிகவும் பழமை வாய்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ளது. இதன் உயரம் சுமார் 6 அடி இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம் சுவாமியின் இடப்பாகம் உள்ளது. மிகவும் அரியது. இறைவனுக்கு வலப்பாகத்தில் தான் மற்ற இடங்களில் உள்ளது. அதிலும் 6 அடி உள்ளது மிகவும் அரிது. இதைப்போல் இந்தியாவில் வேறு எங்கும் இருப்பது அரிது. பிரமனூரில் காணமல் போன கோவிந்தராஜ பெருமாள் கோயில் !!!பிரமனூரில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. அந்த கோயில் பற்றி அருட்கவி சீத்தாராமய்யங்கார் (1887-1961) அபிமான ஸ்தலங்களின் பாசுரங்கள் என்னும் தன்னுடைய திருவருட்பிரபந்தத்தில் இக்கோயிலைப்பற்றி ஒரு வெண்பா பாடியுள்ளார். (பக்கம் 273) இங்குமங்குஞ் சென்றுபக்த ரேமாந் துலையாமல் உரை
மேலும் அவரே அபிமான ஸ்தலங்களின் கீர்த்தனங்கள் என்னும் தன்னுடைய கீர்த்தனங்களுள் இக்கோயிலில் உறையும் பெருமாளைப் பற்றி பாடியுள்ளார். (பக்கம் 427) அன்னையுமப்பனும் அன்புடன்வளர்ப்பர் உறவுறுமன்பர் உரமதில்மன்னி? உரை
கீர்த்தனையிலும் வெண்பாவிலும் பின்னைவளரும் எனத் திருமகள் (செல்வம்) வளர்கின்ற ஊராகப் பிரமனூரைப் போற்றிப் பாடுகிறார் சீதராம்ய்யாங்கார். பிரமனூரில் பெருமாளுக்கென்று ஒரு கோயில் இருந்ததும் அப்பெருமாள் கோயில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இருந்து வந்திருப்பதும் தெரிகிறது. ஆனால் இக்கோயில் தற்போது பிரமனூரில் இல்லை. சீத்தாராமய்யங்காரின் கவிதைகளே அதற்குச் சான்றுகளாய் நிற்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்பிரமனூரில் காணமல்போன பெருமாள் கோவிந்தராஜ பெருமாள் கோயில் |
Portal di Ensiklopedia Dunia