பிரயோக விவேகம்பிரயோக விவேகம் ஒரு இலக்கண நூல். இதே பெயருடைய வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. இதனால் அவ்வடமொழி நூலைப்போலவே எழுத்திலக்கணம் கூறாது சொல்லிலக்கணம் மட்டுமே கூறுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப்பிரமணிய தீட்சிதர் என்பார் இந்நூலை இயற்றினார்[1]. இந்நூலுக்கான உரையையும் இவரே எழுதியுள்ளார். நூற்கொள்கைதமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது.
அமைப்புஇந்நூல் 51 காரிகைகளால் ஆன நான்கு படலங்களைக் கொண்டுள்ளது. இவை, காரகப் படலம், சமாசப் படலம், தத்தித படலம், திங்ஙுப் படலம் என்பன. இவற்றுள் 17 காரிகைகளைக் கொண்ட காரகப்படலம் வேற்றுமையைப் பற்றி விளக்குகிறது. 11 காரிகைகளாலான சமாசப் படலம் தொகைச்சொல் பற்றிக் கூறுகிறது. 6 காரிகைகளிலாலான தத்தித படலம் தத்திதாந்தச் சொற்கள் பற்றியும், 17 காரிகைகளிலாலான திங்ஙுப் படலம் வினைமுற்றுக்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன[3]. பதிப்புகள்பிரயோக விவேகம் நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். பின்னர் தி. வே. கோபாலையர் புதிய விளக்கக் குறிப்புகளுடனும், பின்னிணைப்புகளுடனும் வெளியிட்டார்.
குறிப்புகள்உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia