பிரியங்கா சதீசு ஜர்கிகோலிபிரியங்கா சதீசு ஜர்கிகோலி (Priyanka Satish Jarkiholi-பிறப்பு 1997) என்பவர் கருநாடகத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெல்காவி மாவட்டத்தின் சிக்கோடி மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1] இளமையும் கல்வியும்பிரியங்கா கருநாடகாவின் சிக்கோடியில் உள்ள யமகன்மார்டி கிராமத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.[2] சொந்தமாகத் தொழில் செய்து வரும் ஜர்கிகோலி கருநாடகாவின் பெலகாவியில் உள்ள விசுவேசுவரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கைபிரியங்கா தனது அரசியல் அறிமுகத்தை கருநாடகாவில் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள சிக்கோடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடங்கினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அன்னாசாகேப் சங்கர் ஜோலியை 90,834 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 51.21 சதவீத வாக்குகளைப் பெற்றார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia