பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்
பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் என்பது இந்தியாவில் ஆகத்து 14 அன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு தேசிய நினைவு நாளாகும். இதனை 2021 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் அறிவித்தார்.[2] இந்தியப் பிரிவினையின் போது பல இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்த போது, பல கொடுமைகள் அனுபவித்து, உயிர் இழந்த மக்களுக்காக நினைவுகூறும் நாளாகும்.[3] இந்தியப் பிரிவினையின் போது, பிரிக்கப்பட்ட பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்தனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியர்களுக்கு நினைவூட்டுவதை பிரிவினை கொடுமைகள் நினவு நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.[4][5] இந்தியப் பிரிவினையால் 10 முதல் 20 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் 2 இலட்சம் முதல் 2 மில்லியன் மக்கள் இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 200,000 முதல் 2 மில்லியன் வரையிலான புள்ளிவிவரங்களுடன் சர்ச்சைக்குரியதாக உள்ளது.[6][a] பிரிவினை கொடுமைகள் என்பது பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளில் நடைபெற்றது. ஆகஸ்டு, 1947 ஆம் ஆண்டு இந்தியப்பிரிவினையின் போது இந்தியர்கள் அடைந்த துன்பங்கள் மற்றும் தியாகங்களை தேசத்திற்கு நினைவூட்டுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு 14-ஆம் நாள் பிரிவினை கொடுமைகள் நினைவு நாளாக நினைவுகூரப்படும் என்று 14 ஆகஸ்ட் 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 14 ஆகஸ்டு 2021 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, "பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. இலட்சக்கணக்கான நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் மனமில்லாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பலர் உயிரிழந்துள்ளனர். நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை கொடுமை நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படும். பிரிவினை திகில் நினைவு நாள் சமூக பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றின் நஞ்சை அகற்றி ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டும்."[11] 2022 ஆம் ஆண்டில், "லாகூர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள இடிந்த கட்டிடங்களின் பதாகைகள் அடங்கிய ஒரு கண்காட்சியை தில்லி மெட்ரோவில் அமைத்து பிரிவினை திகில் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.[11] குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia