பிரெடரிக், வேல்சு இளவரசர்
பிரெடரிக் லூயி, வேல்சு இளவரசர் (Frederick Louis, Prince of Wales, 1 பெப்ரவரி 1707 – 31 மார்ச் 1751) என்பவர் 1727 முதல் தனது இறப்பு வரை பிரித்தானியாவின் முடிக்குரிய வாரிசாக இருந்தவர். [இவர் இரண்டாம் ஜோர்ஜ் மன்னருக்கும் அரசி கரோலைனிற்கும் பாசமுறிவுற்ற மூத்த மகனாவார். மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் தந்தையும் ஆவார். 1701இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புரிந்துணர்வு சட்டப்படி பிரெடரிக் பிரித்தானிய அரியணைக்கு அடுத்த வாரிசாக வரிக்கப்பட்டார். தமது தந்தையின் முடியேற்பை அடுத்து செருமனியிலிருந்து பெரிய பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தார். வேல்சு இளவரசர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அப்பொறுப்பை ஏற்றார். ஆனால் தமது தந்தைக்கு முன்னரே இவர் உயிரிழந்ததால் அரசராக முடி சூடவில்லை. 1760 அக்டோபர் 25 இல் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் மறைவிற்குப் பின்னர் பிரெடரிக்கின் மகனான மூன்றாம் ஜார்ஜ் அரசராக முடிசூடினார். துடுப்பாட்டம்பிரெடரிக் இங்கிலாந்து வந்தடைந்தபோது துடுப்பாட்டம் புகழ் பெற துவங்கியிருந்தது. செருமானியரான பிரெடரிக் புதிய ஆங்கில சமூகத்தில் ஐக்கியப்பட துடுப்பாட்டத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அக்காலத்தில் துடுப்பாட்டம் சூதாட்ட விளையாட்டாக இருந்தது. பல பந்தயங்களைக் கட்டியதுடன் விளையாட்டைப் புரக்கும் விதமாக தனது அணியையும் உருவாக்கினார். துடுப்பாட்ட பதிவுகளில் இவரைப் பற்றி முதன்முதலாகப் பதியப்பட்டது 1731இல் சர்ரே கௌன்ட்டி அணிக்கும் இலண்டன் அணிக்கும் இடையேயான போட்டியிலாகும்.[1] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia