யோகன் காசுபர் ஷில்லர் (தந்தை), எலிசபெத் டோரோதியா ஷில்லர் (தாய்)
கையொப்பம்
கேத்தெவும் ஷில்லரும் (வலது) இணைந்த நினைவுச்சின்னம், வைமார்.
யோகன் கிறிசுடோப் பிரெடிரிக் பொன் சில்லர் (Johann Christoph Friedrich von Schiller, இடாய்ச்சு: [ˈjoːhan ˈkʁɪstɔf ˈfʁiːdʁɪç fɔn ˈʃɪlɐ]; 10 நவம்பர் 1759 – 9 மே 1805) செருமானிய கவிஞரும் மெய்யியலாளரும் வரலாற்றாளரும் நாடகாசிரியரும் ஆவார். தனது வாழ்நாளின் கடைசி பதினேழு ஆண்டுகளில் (1788–1805), சில்லருக்கு ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவுடன் ஆக்கபூர்வ நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி அழகியல் குறித்து உரையாடி வந்தனர்; கேத்தெ வரைகோடுகளாக நிறுத்தி வைத்திருந்த ஆக்கங்களை கலைவடிவமாக முழுமையாக்க சில்லர் ஊக்குவித்தார். இந்த நட்பும் உரையாடல்களும் தற்போது வைமார் செவ்வியல் எனக் குறிக்கப்பெறும் வரலாறுக் காலத்திற்கு வழிவகுத்தன. இருவரும் இணைந்து தங்கள் மெய்யியல் கோட்பாடுகளை எதிர்த்தவர்களை நோக்கி இயற்றிய அங்கதமிக்க சிறு கவிதைகள் தொகுக்கப்பெற்று சீனியன் என அறியப்பெற்றது.