பிரெட் கோரெமாட்சு
பிரெட் டொயோசபுரோ கோரெமாட்சு (Fred Toyosaburo Korematsu, சனவரி 30, 1919 – மார்ச் 30, 2005) அமெரிக்க மனித உரிமைப் போராளி. இரண்டாம் உலகப்போரின் போது சப்பானிய அமெரிக்கர்களை தடுப்பு முகாமில் வைத்ததை இவர் எதிர்த்தார். முடியாட்சியிலிருந்த சப்பானிய கடற்படை பேர்ள் துறைமுகத்தை இரண்டாம் உலகப்போரின் போது தாக்கியதை தொடர்ந்து பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து சப்பானிய அமெரிக்கர்களையும் தடுப்புக்காவலில் வைக்க தன் அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் ஆணை 9066 என்பதை பிறப்பித்தார். இதனை எதிர்த்த கோரெமாட்சு தலைமறைவாக இருந்தார். தடுப்புக் காவல் முகாம்களில் சப்பானிய அமெரிக்கர்களை அடைத்தது தொடர்பான ஆணை\சட்டத்தை எதிர்த்து அதைக்குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் இந்த ஆணை சட்டபூர்வமாக செல்லும் என்று கூறி அமெரிக்க அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது[1] கோரெமாட்சு அதிபர் ஆணையை மீறியதற்கான தண்டனையை பல பத்தாண்டுகளுக்கு பின் நீதிமன்றம் ஆச்சட்டத்திதன் (ஆணையின்) அவசயம் தேவையா என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. போர் நடந்து கொண்டிருந்த போது இவ்வாதரத்தை அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் இருந்து மறைத்துவிட்டது. இவரது போட்டத்தின் நினைவாக மனித பிரெட் கோரெமாட்சுவின் உரிமையும் அரசமைப்புமாகிய நாள் என்அபதை 2011 சனவரி 30 முதல் கலிபோர்னியா மாநிலம் கடைபிடிக்கிறது . வர்சீனியா 2015 அன்று இவரது நினைவை சனவரி 30 கொண்டாட சட்டம் இயற்றியுள்ளது. இது இவரது நினைவை கொண்டாடும் இரண்டாவது மாநிலமாகும்[2] பிரெட் டி கோரெமாட்சு கழகம் 2009இல் இவரது சிறப்புகளை கொண்டாட கற்க மனித உரிமைகளை அனைத்து குமகத்திற்கும் எடுத்து சொல்ல ஆரம்பிக்கப்பட்டது குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia