வாசிங்டன், டி. சி., மே 1942 முதல் அக்டோபர் 1944 வரை நாடு-கடந்த நிலையில்;
டாக்லோபான் 20 அக்டோபர் 1944 முதல்.
சப்பானிய ஆக்கிரமிப்பின் போது பொதுநலவாய அரசு ஐக்கிய அமெரிக்காவில் நாடு-கடந்த நிலையில் இயங்கியது, பின்னர் இரண்டாம் குடியரசாக. உண்மையில், அங்கு இரண்டு பிலிப்பீனிய அரசுகள் இயங்கின.
பிலிப்பீன்சுப் பொதுநலவாயம் (Commonwealth of the Philippines)[1] என்பது 1935 முதல் 1946 வரை பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசு ஆகும். 1942 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியரின் ஆதிக்கத்தில் இவ்வரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிக்குட்பட்ட அரசுக்குப் பதிலாக பொதுநலவாயம் உருவாக்கப்பட்டது. பிலிப்பீன்சு முழுமையான விடுதலையை அடைவதற்குத் தயாராகும் பொருட்டு பொதுநலவாயம் வடிவமைக்கப்பட்டது.[9]
பொதுநலவாய அரசு ஒரு வலிமை வாய்ந்த செயலகத்தையும், ஒரு உச்சநீதிமன்றத்தையும் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டது. தேசியவாதக் கட்சியை முக்கிய கட்சியாகக் கொண்டு இதன் அரசியலமைப்பு ஆரம்பத்தில் ஓரவையாகவும், பின்னர் ஈரவை ஆகவும் செயல்பட்டது. 1937 இல், அரசு தகலாகு மொழியை மணிலாவிலும், அதன் சுற்றுவட்டத்திலும் தேசிய மொழியாக அறிவித்தது, ஆனாலும், இம்மொழி பல ஆண்டுகளுக்குப் பின்னரேயே பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. பெண்கள் வாக்குரிமை சட்டபூர்வமாக்கப்பட்டது. 1942 இல் சப்பான் கைப்பற்றுவதற்கு முன்னரேயே இதன் பொருளாதாரம் பெரும் பொருளியல் வீழ்ச்சிக்கு முன்னரான கட்டத்தை எட்டியிருந்தது.
1942 முதல் 1945 வரை பொதுநலவாய அரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. 1946 இல், பொதுநலவாயம் முடிவுக்கு வந்து, பிலிப்பீன்சு முழுமையான விடுதலை அடைந்தது.[10]
↑Roosevelt, Franklin D (November 14, 1935), "Proclamation 2148 on the Establishment of the Commonwealth of the Philippines", The American Presidency Project, Santa Barbara: University of California, This Proclamation shall be effective upon its promulgation at Manila, Philippine Islands, on November 15, 1935, by the Secretary of War of the United States of America, who is hereby designated as my representative for that purpose.
Kalaw, Maximo, The Present Government of the Philippines (book), Filipiniana, archived from the original on 2009-02-12, retrieved 2015-01-01, detailing the functions of the different branches of the Philippine Commonwealth.