புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு
ஆப்கானித்தானின் லாக்மன் மாகாணத்தில் புல்-இ- தருந்தே கிராமத்தில் அசோகரின் அரமேயப் பாறைக் கல்வெட்டின் அமைவிடம் ![]() அசோகரின் புல்-இ- தருந்தே அரேமேயப் பாறைக் கல்வெட்டு ( Pul-i-Darunteh Aramaic inscription) ஆப்கானித்தான் நாட்டின் லக்மான் மாகாணத்தில் புல்-இ- தருந்தே எனுமிடத்தில் பேரரசர் அசோகர் கிமு 260-ஆம் ஆண்டில் நிறுவிய அரமேய மொழியில் பொறித்த பாறைக் கல்வெட்டு ஆகும்.[1] இப்பாறைக் கல்வெட்டை 1969-இல் பெல்ஜியத்தின் மானிடவியல் அறிஞர்கள் ஆப்கானித்தானின் லக்மான் பிரதேசத்தில் தற்செயலாக கண்டுபிடித்தனர். 1973-ஆம் ஆண்டில் இதே பகுதியில் இக்கல்வெட்டின் பிற துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2] 1935-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அசோகரின் இந்த அரமேய மொழிப் பாறைக் கல்வெட்டு, 1915-இல் ஜான் மார்ஷல் கண்டுபிடித்த அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு, அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் மற்றும் அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டுகள் போன்றே உள்ளது.[2] பாறைக் கல்வெட்டின் உள்ளடக்கம்இக்கல்வெட்டின் உள்ளடக்கம் முழுமை பெறவில்லை. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட இடம், எழுத்து நடை, பயன்படுத்தப்பட்ட சொற்களஞ்சியம், கல்வெட்டை இப்பகுதியில் அறியப்பட்ட மற்ற அசோகர் கல்வெட்டுகளுடன் இணைக்க உதவுகிறது. மற்ற கல்வெட்டுகளின் வெளிச்சத்தில், புல்-இ-தாருந்தே கல்வெட்டு, பிராகிருதம் மற்றும் அரமேயம் மொழிகளின் கலவையைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் அராமைக் எழுத்துக்களில் உள்ளன, மேலும் பிந்தையது முதல் மொழியின் மொழிபெயர்ப்புகளைக் குறிக்கிறது.[3] இந்தக் கல்வெட்டு அசோகரின் ஆணைகள் கொண்டுள்ளது. இதை அசோகரின் சிறு பாறை ஆணைகளில் வகைப்படுத்த முன்மொழிந்துள்ளனர்.[4] அசோகரின் புல்-இ- தருந்தே அரேமேயப் பாறைக் கல்வெட்டின் எழுத்துப்பெயர்ப்புகள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia