புஷ்பேந்திர சிங் சந்தேல்
குன்வர் புஷ்பேந்திர சிங் சந்தேல் (Kunwar Pushpendra Singh Chandel) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 17 வது மக்களவையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து இரண்டு முறை இதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] சொந்த வாழ்க்கைபுஷ்பேந்திர சிங் சந்தேல் உத்தரப் பிரதேசத்தின் மகோபாவில் 8 அக்டோபர் 1973 இல் குன்வர் அர்பால் சிங் சந்தேல் மற்றும் சீலா சிங் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மூலம் சட்டப்பட்டமும் பெற்றார். 18 பிப்ரவரி 1999 அன்று தீபாலி சிங் என்பவரை மணந்தார். திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia