பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை விளைவாக நடந்த முதலாம் இந்திய -பாகிஸ்தான் போரின் போது, காஷ்மீர் அரசிடமிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீரின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவலாகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மாவட்டமான பூஞ்ச் மாவட்டதின் ஒரு பகுதியாகும்.[1] இதன் தலைமையிடமாக ராவலாகோட் உள்ளது. இம்மாவட்டத்தில் சுதன் மற்றும் அவான் இன பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. பூஞ்ச் மாவட்டப் பிரிவினைஆங்கிலேயேர்களிடமிருந்து விடுதலையான இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நடத்திய 1947 இந்திய பாகிஸ்தான் போரின் விளைவாக ஒன்றிணைந்த பூஞ்ச் மாவட்டம் இரண்டாக பிரிந்தது. பூஞ்ச் மாவட்டத்தின் மேற்கு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், பூஞ்ச் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia