பூழிநாடு (சேர நாடு)பூழியர் என்பவர் சங்ககால ஆயர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர். பூழியர் மேய்ச்சல் தொழிலை கொண்டிரு தனர் .[1] அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர். [2] பூழி என்னும் சொல் புழுதியைக் குறிக்கும்.[3] பூழில் என்னும் சொல் கமழும் மணத்தைக் குறிக்கும் [4] இதனால் கொங்குநாடு என்பது மணம் மிக்க நாடு என்னும் பொருளைத் தரும். பூழிநாட்டுச் செருப்புமலைப் பாதையில் வயிரக்கற்கள் கிடைக்கும் [5] பல்யானைச் செல்கெழு குட்டுவன், [6] களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [7] செல்வக் கடுங்கோ வாழியாதன் [8] பெருஞ்சேரல் இரும்பொறை [9], இளஞ்சேரல் இரும்பொறை [10] ஆகியோர் பூழிநாட்டைக் கைப்பற்றி ஆண்ட சேரமன்னர்கள் எனத் தெரியவருகின்றனர். பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். பாண்டியன் நெடுமாறனை குறிக்க பாண்டிக்கோவை எனும் நூல் பூழியர் கோன் என சுட்டுகிறது [12] அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia