பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
பெங்களூரு பல்கலைக்கழகம் (Bangalore University)கர்நாடகத்திலுள்ள பெங்களூருவில்] அமைந்துள்ளது. இது ஒரு பொது மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலுள்ள பழமையான பல்கலைக்கழகங்களுள் இதுவும் ஒன்று. இது 1886 இல் தொடங்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் (AIU) ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக மானியக் குழுவைச் (UGC) சார்ந்துள்ளது. வரலாறுமுதலில் "சென்ட்ரல் கல்லூரியாக" 1886இல் ஆங்கில அரசால் கட்டமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் ஜூலை 10, 1964 அன்று "பெங்களூரு பல்கலைக்கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டது. மேற் படிப்பிற்கான கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அப்போதைய மைசூர் மாநிலத்தின் கீழ் கொண்டு வருவதற்காக இம்மாற்றம் செய்யப்பட்டது. இப்பல்கலைக்கழகம் ஞானபாரதி வளாகத்திலிருந்து இயங்குகிறது. "சென்ட்ரல் கல்லூரி" (1886 இல் தொடங்கப்பட்டது) மற்றும் பொறியியல் பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா கல்லூரி (UVCE)(1912இல் தொடங்கப்பட்டது) இரண்டும் "பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உள்ளடக்கப்பட்டன. இந்தியாவிலேயே அதிகமான பிஎச்டி பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக்கழகம் இதுதான்[சான்று தேவை]. அதனாலேயே வெளிநாட்டவர்களிடம் பிரபலமடைந்துள்ளது இப் பல்கலைக்கழகம். இதன் மூலம் பல வெளிநாட்டு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். வளாகம்இதற்கு இரண்டு வளாகங்கள் உள்ளன- நகர வளாகம் மற்றும் சென்ட்ரல் கல்லூரி வளாகம்- ஞான பாரதி வளாகம். நிர்வாகம்பி. திம்மே கௌடா இப்பல்கலைக்கழகத்தின் புதிய துணை-வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் மங்களூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார். இதற்கு முன்னிருந்த துணை வேந்தர் டாக்டர். என். பிரபு தேவ் அக்டோபர் 12,2012 அன்று தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கர்நாடக சுகாதார அமைப்பு குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பணி ஃபெப்ரவரி, 2013இல் முடிவடைவதாக இருந்தது. தனிச்சிறப்புகள்
உடன் இணைந்த கல்லூரிகள்பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் 70 அரசாங்கக் கல்லூரிகள், 52 உதவி பெறும் கல்லூரிகள், 11 உதவி பெறாத கல்லூரிகள் இடம் பெறுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில:
|
Portal di Ensiklopedia Dunia