பெண் வழிகாட்டிகள் இயக்கம்![]() ![]() ![]() பெண் வழிகாட்டிகள் இயக்கம் (Girl Guides) (ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், வேறு சில நாடுகளிலும் பெண் சாரணர் இயக்கம் (Girl Scouts) என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உலகளவில் காணப்படும் ஒரு இயக்கம் ஆகும். இது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் மட்டுமே வடிவமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 1909இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனென்றால் அப்போதைய சிறுவர் சாரணர் இயக்கத்தில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை இருந்தது.[1] உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், இயக்கம் பல்வேறு வழிகளில் வளர்ந்தது. சில இடங்களில், பெண்கள் சாரணர் அமைப்புகளில் சேர்ந்தனர் அல்லது சேர முயன்றனர்.[2] மற்ற இடங்களில், அனைத்து பெண் குழுக்களும் சுயாதீனமாக தொடங்கப்பட்டன. மேலும் காலம் செல்லச் செல்ல, இந்த அனைத்து பெண் குழுக்களும் சிறுவர்களையும் சேர்த்துவிடத் தொடங்கின, மற்றவை சிறுவர்களின் அமைப்புகளுடன் ஒன்றிணைக்கத் தொடங்கின. மற்ற சந்தர்ப்பங்களில், கலப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன. சில சமயங்களில் பிளவுபடவும் செய்தது. அதே வழியில், பெண் வழிகாட்டி இயக்கம் அல்லது பெண் சாரணர் இயக்கம் என்ற பெயர் இவ்வகையான குழுக்களால் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில குழுக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகின்றன. உலக பெண் வழிகாட்டிகள் இயக்கம் மற்றும் பெண் சாரணர்களின் சங்கம் 1928இல் உருவாக்கப்பட்டது. இது 145 நாடுகளில் உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இப்போது உலகம் முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.[3] அமைப்பு 2010 முதல் 2012 வரை மூன்று வருடங்கள் சர்வதேச பெண் வழிகாட்டி இயக்கம் மற்றும் பெண் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. வரலாறுசர்வதேச சேவை வழிகாட்டி இயக்கம்சர்வதேச சேவை வழிகாட்டி இயக்கம் என்பது 1942 இல் பிரிட்டனில் பெண் வழிகாட்டிகள் சங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். அவர்களின் நோக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக வயது வந்த பெண் வழிகாட்டிகளின் குழுக்களை ஐரோப்பாவிற்கு அனுப்புவதாகும்.[4] [5] பிரிட்டன், ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து , கென்யாவிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட 198 வழிகாட்டிகளும், 60 சாரணர்களும் குழுக்களாக பணியாற்றினர்.[6] [7] சிலர் பெர்கன்-பெல்சன் இடம்பெயர்ந்தோர் முகாமின் நிவாரணப் பணிக்குச் சென்றனர். மற்றவர்கள் மலாயாவில் சேவை செய்தனர். ஒற்றை பாலின பணிசிறுவர் சாரணர் திட்டங்களுக்கு பெண் வழிகாட்டி இயக்கம் மற்றும் பெண் சாரணர் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. பல பெண்கள், சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தார்கள். அதையும் செய்ய விரும்பினர். பல பெண்கள் அமைப்புகள் சிறுவர்களை நகலெடுப்பது அல்லது பிரதிபலிப்பதைத் தவிர்க்க முயன்றன. 2012ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் பெண் வழிகாட்டி இயக்கங்களின் தலைமை நிர்வாகியாகவும், 2007 முதல் குடும்ப திட்டக் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ஜூலி பென்ட்லி , டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பெண் வழிகாட்டி இயக்கங்களை "முடிவான பெண்ணிய அமைப்பு" என்று விவரித்தார். [8] பெரும்பாலான சாரணர் அமைப்புகள் கலப்பு-பாலினமாக மாறியபோதும், வழிகாட்டுதல் இயக்கங்கள் பெரும்பாலான நாடுகளில் பெண் மையப்படுத்தப்பட்ட திட்டத்தை வழங்க தனித்தனியாக இருந்தது. உதாரணமாக, இங்கிலாந்து சாரணர் சங்கம் 1976ஆம் ஆண்டில் வென்ச்சர் சாரணர் திட்டத்துடன் ஒரு கலப்பு பாலின ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியது. 1991இல் அனைத்து வயது அடிப்படையிலான பிரிவுகளுக்கும் (விருப்பத்தேர்வு), 2007 இல் முழுமையான இணை கல்வி ஆனது.[9] இருப்பினும் இங்கிலாந்தில் பெண் வழிகாட்டி இயக்கம் சிறுமிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் உள்ள பிரிவுகளில் திருநங்கைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். [10] [11] [12] ஐக்கிய இராச்சிய பெண் வழிகாட்டி இயக்கத்தில் திருநங்கைகளும் தலைவர்களாக அனுமதிக்கப்படுகிறார்கள். [10] மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia