பெருந்தேவனார் (வீரசோழிய உரையாசிரியர்)சங்ககாலப் பெருந்தேவனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், ஆகியோருக்குப் பின்னர் வாழ்ந்த பெருந்தேவனார் ஒருவர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு. இவர் தமது உரையில் வீரராசேந்திரன் (1063-1070) பற்றிய ஐந்து வெண்பாப் பாடல்களை மேற்கோளாகத் தந்துள்ளார். வீரசோழியம் என்ற நூலில் ஆசிரியர் புத்தமித்திரரின் மாணாக்கர் இந்தப் பெருந்தேவனார். இருவரும் பௌத்தர்கள்.
இந்த உரையின் இறுதியில் காணப்படும் பாடல் ஒன்று இந்த உரைநூலுக்குச் சிறப்புப் பாயிரம் போல அமைந்துள்ளது. பொன்பற்றிக் காவலன் பொன்பற்றி என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்தில் பொன்பேத்தி என்னும் பெயருடன் இன்று வழங்கிவருகிறது. (புத்தமித்திரன்) வீரசோழியம் செய்தான். இந்த நூல் 181 காரிகை கட்டளைக்கலித்துறை கொண்டது. பெருந்தேவனார் இதற்குப் பொழிப்புரை செய்தார். – என்னும் செய்திகள் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. வீரசோழியம் ஐந்திலக்கணம் கூறும் நூல். இது தமிழ்நாட்டில் அதிகம் பயிலப்படவில்லை. ஆசிரியர் பௌத்தர் என்பதால் இலங்கை சிங்களவரால் பயிலப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. உரை பற்றிய சில குறிப்புகள்
கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia