பேராவூரணி தொடருந்து நிலையம்
பேராவூரணி தொடருந்து நிலையம் (Peravurani railway station, நிலையக் குறியீடு:PVI) இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பின்னணிஇத்தொடருந்து நிலையமானது, பேராவூரணி நகரத்தினுள் அமைந்துள்ளது. இது வடக்கில் திருத்துறைப்பூண்டி தொடருந்து நிலையத்தையும், தெற்கில் காரைக்குடி தொடருந்து நிலையத்தையும் இணைக்கிறது. இது ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் தொடருந்து பாதையாக அமைக்கப்பட்டு, இதில் இரண்டு பயணிகள் தொடருந்தும், ஒரு விரைவுத் தொடருந்தும் என மொத்தம் மூன்று தொடருந்துகள், தினமும் இயங்கி கொண்டிருந்தது. இந்த தொடருந்து நிலையத்துக்கு அருகிலேயே, பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் ஆகும்.[1] வழித்தடம்பேராவூரணி தொடருந்து நிலையமானது, திருத்துறைப்பூண்டி தொடருந்து நிலையத்திற்கும், காரைக்குடி தொடருந்து நிலையத்திற்கும் இடையில் உள்ளது. இப்பொழுது பாதை மாற்று பணி மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்குடி வரை 187 கிலோமீட்டா நீட்டிப்பு செய்யும் பணிக்கு ரூ. 711 கோடி 2007 – 2008ல் அனுமதிக்கப்பட்டு, பணி நடைபெறுவதன் காரணமாக, தொடருந்து நிலையம் பயணிகள் யாருமற்ற நிலையில் உள்ளது. ஆனால் மாற்றும் பணி மிக மெதுவாக நடைபெறுகிறது. பேராவூரணி தொடருந்து நிலையக் கட்டிடம், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றது.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia