பொரவச்சேரி கந்தசாமி கோயில்
பொரவச்சேரி கந்தசாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1] அமைவிடம்இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., சிக்கலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இறைவன்இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் மற்றும் பொரவாச்சேரி ஆகிய ஊர்களில் அமைந்த முருகனின் திருமேனிகள் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டதாகக் கூறுவர்.[2] அமைப்புஅழகிய திருவாட்சியுடன், தேவியர் இரு புறமும் இருக்க, நரம்பும், நகக்கண்களுடன் நகமும் தெரியும் அளவு சிறப்பான சிற்பாக மூலவர் உள்ளார். 12 கரங்களுடன் இடது காலை மடித்து, வலது கால் தொங்கவைத்துக் கொண்டு பாம்பினைக் கவ்விய மயில் தன் இரு காலில் நிற்கின்ற நிலையில் காணப்படுகிறார். பூசைகள்இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia