போக்கிரி (திரைப்படம்)
போக்கிரி (Pokkiri) 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தினை பிரபுதேவா இயக்கினார். முக்கிய கதைப்பாத்திரங்களில் விஜய், அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் சனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2005-இல் வெளியான திருப்பாச்சி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. கதைநாயகன் தனது திறமையை வெளிப்படுத்தியது போல வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். கதைவிஜய்பற்றிக் கேள்விப்பட்டு ஊரின் பிரபல தாதாவான வின்சென்ட் அசோகன் விஜயைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். இவர்களது எதிர் கும்பலான ஆனந்தராஜ் ஆட்கள் விஜய்யுடன் மோத, அடுக்கடுக்காக அவர்களை கொலை செய்கின்றார். ஒரு கட்டத்தில் வின்சென்ட் கொல்லப்பட, அவரது தலைவரான பிரகாஷ்ராஜ் இந்தியா வருகிறார். வந்தவர் ஆனந்த்ராஜை கொன்றது மட்டுமல்லாது நடுவண் அரசின் அமைச்சரையும் கொல்லத் திட்டம் தீட்டுகிறார். இதனை அறியும் போலீஸ் கமிஷனர் நெப்போலியன் பிரகாஷ்ராஜை தந்திரமாகக் கைது செய்கிறார். தங்கள் தலைவனை விடுவிக்க நெப்போலியன் மகளைக் கடத்துகிறது பிரகாஷ்ராஜின் கும்பல். தன் மகளுக்காக பிரகாஷ்ராஜை விடுதலை செய்கின்றார் நெப்போலியன். அப்போது தங்கள் ஆட்களுக்குள் காவல்துறை உளவாளி இருப்பதாக பிரகாஷ் ராஜ் அறிந்து கொள்ள கதை முடிவை நோக்கிச் செல்கின்றது நடிகர்கள்
பாடல்இப்படத்திற்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
துணுக்குகள்
விமர்சனம்ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "விஜய் உடம்புக்கு இது பழைய கமல் ஸ்டைல் ‘காக்கிச் சட்டை’. டெய்லர்... அட, நம்ம பிரபுதேவா!... விஜய் ரசிகர்களுக் கேத்த ஆக்ஷன் பொங்கல். வன் முறையைக் கொஞ்சம் குறைத்திருந்தால், போக்கிரி இன்னும் அழுத்தமாக மனசுக்குள் இடம் பிடித்திருப்பான்!" என்று எழுதி 42100 மதிப்பெண்களை வழங்கினர்.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia