ப. வெங்கடசுப்பிரமணியன்

ப. வெங்கடசுப்பிரமணியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்கே. பாலாஜி
பின்னவர்கே. பாலாஜி
தொகுதிகாஞ்சிபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-11-05)5 நவம்பர் 1938
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்வழக்கறிஞர்

ப. வெங்கடசுப்பிரமணியன் (P. Venkatasubramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரத்தில் 1938ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாளன்று பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்தப் பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பினை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்த வெங்கடசுப்பிரமணியன் இரு மலர்கள் இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 466-467.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya