மஞ்சிமா மோகன்
மஞ்சிமா மோகன் (ஆங்கிலம்: Manjima Mohan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக துவக்கினார். தனிப்பட்ட வாழ்க்கைமஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நிர்மலா பவன் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்புவரை படித்தார். இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்தார்.[1] நடிகர் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்துள்ளார். திரைப்பட வாழ்வுஇவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும், "தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.[2] படத்தில் நடிக்க துவங்கியபோது அது திகிலூட்டுவதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஜி. பிரஜாத் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசனின் திரைக்கதையில் ஒரு வடக்கன் செல்பி படத்தில், முன்னணி பெண் பாத்திரத்தில் நடித்தார்.[3] ஒரு வடக்கன் செல்பி படம் வெளியானதைத் தொடர்ந்து, மஞ்சிமா தனது தனது முதல் தமிழ்த் திரைப்படமான கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார். திரைப்படங்கள்
|} மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia